68 Years of Kanavane Kankanda Deivam: ஆக்ஷன் காட்சியில் அசத்திய ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்!
கணவனே கண்கண்ட தெய்வம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

திரையில் காதல் மன்னனாக ஜொலித்த ஜெமினி கணேசன் நிஜ வாழ்விலும் மூன்று திருமணங்கள் செய்து காதல் மன்னனாக திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளிவந்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது 1955 ஆம் ஆண்டு மே 6-ந் தேதி இதே நாளில் இந்தப் படம் ரிலீஸாகியது. இதில், ஜெமினி கணேசனுடன் நாகையா, எம். என். நம்பியார், பிரெண்ட் ராமசாமி, நாட் அண்ணாஜிராவ், வி.பி.பலராமன், அஞ்சலி தேவி, லலிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் அஞ்சலி தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. குறிப்பாக அக்காலத்து பெண்களை கண்ணீரில் கரைய வைத்த திரைப்படம். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ', 'உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே', 'அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளராய் என் ராஜா' ஆகிய பாடல்கள் இன்றளவும் இரவு நேரங்களில் அமைதியான சூழலில் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடலாக இருக்கிறது.
