சிம்புவை சுத்தி சுத்தி வரும் துயரம்.. ஆப்பு வைத்த கமல்.. அவதாரம் எடுக்கும் சிம்பு.. என்னதான் நடக்கிறது?
நடிகர் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க உள்ளதாக கமல் ஹாசன் அறவித்திருந்த நிலையில், தற்போது அறவிப்பை வாபஸ் பெற்று படத்திலிருந்து விலகி உள்ளார்.

நடிகர் சிலம்பரசன் மாநாடு, வெந்துத் தணிந்தது காடு, பத்து தல படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது.
வரவேற்பு பெற்ற படத்தை கைவிட்ட கமல்
இதையடுத்து சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்த நிலையில்,படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின், படப்பிடிப்பு தொடங்க மிகுந்த தாமதம் ஆனதால், சிம்பு, கமல் ஹாசனின் தக் ஃலைப் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருப்பார்.
இந்நிலையில், தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சிம்புவின் 48வது படத்தை தயாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டு சிம்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் கமல்.
தவித்த சமயத்தில் சிம்பு எடுத்த முடிவு
நடிகர் கமல் ஹாசனின் இந்த முடிவால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வரும் சிலம்பரசன், தேசிங்கு பெரியசாமியின் இந்த படத்தை தானே தயாரிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால், சிலம்பரசன் தனது 48வது படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரம்
நடிகர் சிலம்பரசன் தனது தந்தை டி. ராஜேந்திரனின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானார். அதனைத் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தார். வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிம்பு கைத்தேர்ந்தவர்.
பின் மெல்ல மெல்ல தனது நடிப்புத் திறமையாலும், வசன உச்சரிப்பாலும், நடனத்தாலும் மக்களைக் கவர்ந்தார்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி
இதையடுத்து, இவரது திரைப்பயணத்தில் பல சவால்களையும் சந்தித்து உள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை, சோம்பேறி சிம்பு என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
2019 ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை இவரது படங்கள் எதுவும் சரிவர ஓட வில்லை. பின்னர் அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தொடர் வெற்றி
கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படம் வித்தியாசமாக டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த நிலையில், சிம்புவிற்கு மிகச்சிறப்பான கம்பேக் படமாக இந்தப் படம் அமைந்தது. அதனைத் தொடர்ந்து கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படமும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்ததாக பத்து தல படமும் வெற்றி படாமகாவே அமைந்தது.
சிம்பு 48
அதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் இணைந்திருந்தார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வந்த திரைப்படம் பட்ஜெட் பிரச்சினையால் படப்பிடிப்பு ரத்தானது.
இதையடுத்து சிலம்பரசன், மணிரத்னம் இயக்கிய தக் ஃலைப் திரைப்படத்தில் கமலுக்கு தம்பியாக நடித்திருப்பார். இந்நிலையில், சிம்பு தற்போது ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

டாபிக்ஸ்