ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம்: கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு கமல்ஹாசன் இரங்கல்!
பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி. ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம்: கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு கமல்ஹாசன் இரங்கல்!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், அந்த சம்பவத்தால் மிகவும் மனம் வருந்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கமல்ஹாசன் மனவேதனை
இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வருத்தம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.