கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்..

கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்..

Malavica Natarajan HT Tamil
Published May 29, 2025 09:39 AM IST

கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது என்று கூறியதற்கு ஏற்பட்ட பெரும் சர்ச்சைக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், தான் எதுவும் தவறாகச் சொல்லவில்லை என்றும், அன்புடன் கூறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்..
கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்.. (PTI)

கர்நாடகாவில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினர். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் பதிலளித்து, தான் எதுவும் தவறாகச் சொல்லவில்லை என்றும், அன்புடன் கூறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திறந்த மனப்பான்மை கொண்ட மாநிலம்

செய்தி நிறுவனமான PTI-யிடம் பேசிய கமல், “நான் கூறியது அன்புடன் கூறப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றை கற்றுக் கொடுத்தார்கள்... நான் எதுவும் தவறாகச் சொல்லவில்லை. தமிழ்நாடு என்பது மிகவும் திறந்த மனப்பான்மை கொண்ட இடம் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். இதுபோன்ற வேறு மாநிலங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு மேனன் (எம்.ஜி.ஆர்) முதல்வராக இருந்த மாநிலம்... ஒரு ரெட்டி (ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்) முதல்வராக இருந்த மாநிலம்... ஒரு தமிழன் (எம். கருணாநிதி) முதல்வராக இருந்த மாநிலம்... பின்னர் ஒரு கன்னட ஐயங்கர் (மண்டியாவைச் சேர்ந்தவர்) முதல்வராக இருந்த மாநிலம்.” என்று கூறினார்.

‘இதற்கு மூன்றாவது கோணமும் உண்டு’

மேலும் அவர், “எனவே, இந்த ஆழமான விவாதங்களை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். வடக்குப் பார்வையில் பார்த்தால், அவர்களின் கூற்று சரி. தென்குமரி (தெற்கு) பார்வையில் பார்த்தால், என் கூற்று சரி. இதற்கு மூன்றாவது கோணமும் உண்டு - அறிஞர்கள், மொழி நிபுணர்கள். இது ஒரு பதில் அல்ல, விளக்கம் அல்ல. காதல் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது.” என்று கூறினார்.

கமல் பேச்சு

முன்னதாக, தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். கடைசியாக மேடையேறி பேச ஆரம்பித்த கமல்ஹாசன் வழக்கம் போல ‘உயிரே உறவே தமிழே’ என்று தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

அப்போது அவர், ‘நடிகர் சிவராஜ்குமார் வேறு மாநிலத்தில் வசிக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கே இருக்கிறார். அதன் காரணமாகவே நான் என் பேச்சைத் தொடங்கியபோது, ​​‘என் வாழ்க்கையும் என் குடும்பமும் தமிழ்’ என்று சொன்னேன். உங்கள் மொழி (கன்னடம்) தமிழிலிருந்து பிறந்தது. எனவே நீங்கள் அந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள்' என்று பேசினார்.

தக் லைஃப் படம்

‘தக் லைஃப்’ படம், ‘நாயகன்’ படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ள படம். இதில் சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அலி ஃபஜல், பங்கஜ் திரிபாதி, ரோஹித் சாரஃப் மற்றும் பாபுராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.