‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு
‘ஜோரா கையத் தட்டுங்க’ என்னும் படத்தினுடைய முன்னோட்டமும் பாடல்களும் ஏற்கனவே கண்டுகளித்து பேருவுவகை கொண்டேன் என்றும், நீங்கள் இப்போது பார்த்திருப்பீர்கள் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியிருக்கிறார்.

‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு
காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு என்றும்; அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் தம்பி யோகி பாபு என்றும்; அப்படிப்பட்ட யோகி பாபுவுக்கு எந்தக் காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது என்றும் கலைப்புலி எஸ். தாணு கூறியிருக்கிறார்.
நடிகர் யோகிபாபு நடித்த நகைச்சுவைத்திரைப்படம் ‘ ஜோரா கையத்தட்டுங்க’. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த மேடையில் தயாரிப்பாளர் கலைப்புலி. எஸ். தாணு படக்குழுவினரை வாழ்த்திப்பேசினார். அப்போது பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ‘’ உங்கள் அனைவருக்கும் தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.