‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு

‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு

Marimuthu M HT Tamil Published May 09, 2025 04:24 PM IST
Marimuthu M HT Tamil
Published May 09, 2025 04:24 PM IST

‘ஜோரா கையத் தட்டுங்க’ என்னும் படத்தினுடைய முன்னோட்டமும் பாடல்களும் ஏற்கனவே கண்டுகளித்து பேருவுவகை கொண்டேன் என்றும், நீங்கள் இப்போது பார்த்திருப்பீர்கள் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியிருக்கிறார்.

‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு
‘காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு.. யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது’: கலைப்புலி எஸ். தாணு

நடிகர் யோகிபாபு நடித்த நகைச்சுவைத்திரைப்படம் ‘ ஜோரா கையத்தட்டுங்க’. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த மேடையில் தயாரிப்பாளர் கலைப்புலி. எஸ். தாணு படக்குழுவினரை வாழ்த்திப்பேசினார். அப்போது பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ‘’ உங்கள் அனைவருக்கும் தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘ஜோரா கையத் தட்டுங்க’ என்னும் படத்தினுடைய முன்னோட்டமும் பாடல்களும் ஏற்கனவே கண்டுகளித்து பேருவுவகை கொண்டேன். நீங்கள் இப்போது பார்த்திருப்பீர்கள். கண்டுகளித்திருப்பீர்கள்.

’யோகிபாபு நல்ல மனிதர்’: கலைப்புலி எஸ்.தாணு

எல்லோருக்கும் நல்லவனாகத் தான் தம்பி யோகிபாபு இருக்கிறார். எந்தச்சூழ்நிலையிலும் நான் ஒரு போன் பண்ணினால், என்ன செய்யணும்னுவார். புரொடியூசருக்கு ஒரு நாள் எக்ஸ்ட்ரா டேட் கொடுப்பாங்க.

காசே வாங்காது பண்ணித்தர்றேன்னாரு. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் தம்பி யோகி பாபு.

அப்படிப்பட்ட யோகி பாபுவுக்கு எந்தக்காலத்திலும் மனச்சோர்வு வரக்கூடாது. எந்தச்சூழ்நிலையிலும் மனச்சோர்வு வரக்கூடாது. ஏனென்றால், யோகி பாபு திரையுலகுக்கு அவசியம் தேவை.

’ஜோரா கையத்தட்டுங்க’ என்கிற இந்தத் திரைப்படம் பிரமாதமான கமர்சியல் திரைப்படம். ’ஜோரா கையைத்தட்டுங்க’,திரைப்படத்தின் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளரும் அடிக்கடி எங்கள் அலுவலகத்துக்கு வருவாங்க.

’ஜோரா கையத்தட்டுங்க திரைப்படத்தயாரிப்பாளரின் பெயர் தெரியாது’: கலைப்புலி எஸ். தாணு

இந்த நிமிஷம் வரைக்கும் அவங்களுடைய பெயர் தெரியாது. உண்மையிலேயே தெரியாது. ஆனால், அவங்க வந்தால், வரவேற்று உபசரித்து என்ன செய்யணுமோ, அதைச்செய்து, வேணும்கிறதைப் பண்ணித்தருவேன்.

அந்தமாதிரி திரையுலகத்துக்கு மிகப்பெரிய நல்லது செய்யணும்கிறதுக்காக, முயற்சி எடுப்பதில் தம்பி தனஞ்ஜெயனும் ஒருத்தர். அப்படி எல்லோரும் நலம் பெறணும். வளம் பெறணும். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்துக்கொண்டார்.

யோகி பாபுவைக் குறை கூறிய கஜானா திரைப்பட தயாரிப்பாளர்

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு, கஜானா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு யோகி பாபு செல்லவில்லை. இதனை தயாரிப்பாளர் ராஜா கடுமையாக விமர்சித்தார். அப்போது பெரிதாகப்பேசப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களுக்கு பஞ்சம் உள்ளது. இது ஒரு சிறந்த படமாக இருக்கும். வெளியான பின்னர் பெருமளவு பேசப்படும். இயக்குநர் சிறப்பாக இந்த படத்தினை எடுத்துள்ளார்” எனக் கூறினார்.

மேலும் ’யோகி பாபு வந்துள்ளாரா?’ எனக் கேள்வி கேட்டு விட்டு, ’அவர் வரவில்லை என்றால் அவருக்கு 7 லட்சம் போடவில்லை என்று அர்த்தம். இந்த 7 லட்சத்தை போட்டு இருந்தால் நிச்சயம் வந்து இருப்பார். இது ஒரு கேவலமான விஷயம். ஒரு நடிகனுக்கு இந்த பொறுப்பு இல்லையென்றால் நடிகனாக இருக்கவே லாயக்கு இல்லை" எனக் கடுமையாகத் திட்டினார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு குறித்து, முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு பேசியிருப்பது அவரைப் புகழும் வகையில் இருந்தது.