Kajal Aggarwal: இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை.. முதல் ஆடிஷனில் அழுத காஜல் அகர்வால்.. என்ன நடந்தது?
Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் தான் படத்திற்கு முதல் முறையாக தேர்வான நிகழ்வு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
Kajal Aggarwal: தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டிலும் தனது காலடியை பதித்துவிட்டார் காஜல். ஆனால் காஜல் தமிழ், தெலுங்கு மூலம் நட்சத்திரமாகிவிட்டார்.
காஜலின் முதல் படம் கியூன் ஹோ கயா நா என்ற இந்திப் படம். பின்னர், 2009 ஆம் ஆண்டு வெளியான மகதீரா படத்தின் மூலம் நடிகையானார் காஜல். அதற்கு பிறகு இந்தி சினிமா பக்கமே காஜல் திரும்பிப் பார்க்கவே இல்லை.
தென்னிந்தியாவிலும், பாலிவுட்டிலும் நிறைந்திருக்கும் காஜல்
தென்னிந்திய சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களின் கதாநாயகியாக வலம் வந்தவர் காஜல். தென்னிந்தியாவில் வெற்றி பெற்று மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பிய காஜல் இந்த முறை வெற்றி பெற்று உள்ளார். தென்னிந்தியாவிலும், பாலிவுட்டிலும் நிறைந்திருக்கும் காஜல் இன்று அம்மாவாகவும் இருக்கிறார். காஜலின் கணவர் கௌதம் கிட்ச்லு. இருவரின் மகன் நீல்.