குளிக்கச் சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குளிக்கச் சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?

குளிக்கச் சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 07, 2025 03:39 PM IST

காந்தாரா 2 படப்பிடிப்பில் கபில் என்பவர் இறந்து இருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது.

குளிக்க சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?
குளிக்க சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?

துணை நடிகர் இறப்பு

துணை நடிகரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் நேற்றைய தினம் அங்குள்ள கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கிறார். மதிய உணவுக்கு பிறகு ஆற்றில் கபில் குளிக்கச் சென்றதாகவும், நீர் வரத்து அதிகரித்த காரணத்தால் அவர் அதில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷயம் கேள்வி பட்டு உள்ளூர் அதிகாரிகள், தீயணைப்புத்துறை கபிலை ஆற்றில் தேடும் பணியில் இறங்கினர். ஆனால், மாலை கபிலின் உயிரிழந்த உடல் மட்டுமே மீட்கப்பட்டது. கொல்லூர் போலீஸ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் படக்குழுவினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காந்தாரா: சாப்டர் 1 பற்றி

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் முந்தைய பாகம்தான் காந்தாரா 2 இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 2023 -ல் வெளியிடப்பட்டது.

டீசரின் தொடக்கத்தில், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்க உதவும் ‘ஒளி’யை அவர்கள் பார்க்க முடியுமா என்று ரிஷப் கேட்பது போல காட்சிகள் இருந்தன. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டியின் நீண்ட கூந்தல், முறுக்கேற்றப்பட்ட உடல் உள்ளிட்டவை பெருங்கவனம் ஈர்த்தன.

345- 540 CE வரையிலான பொது ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த கடம்பர்கள், கர்நாடகாவை சேர்ந்த பண்டைய அரச குடும்பம் ஆகும். அவர்கள் கர்நாடக் மாநிலத்தையும், கொங்கனையும் ஆட்சி செய்தனர். சிவபெருமானின் வியர்வையிலிருந்து திரிலோச்சனா கடம்பம் தோன்றியதாக, புராணக்கதை கூறுகிறது ஜெயராம், கிஷோர் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரிஷப் ஷெட்டியின் வரும் படங்கள்

இதைத் தவிர, பிரசாந்த் வர்மா இயக்கி வரும் ஜெய் ஹனுமான் படத்திலும் ரிஷப் நடிக்கிறார். இது ஹனுமான் படத்தின் தொடர்ச்சியாகும். கலியுகத்தில், ஸ்ரீராமருக்கு அளித்த புனித வாக்குறுதியால் அக்னியாதவாசத்தில் (அகத வாழ்வில்) வாழும் ஹனுமான் பற்றி, இந்தக்கதை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.