Aishwarya Arjun: “தம்பி ராமையா போட்ட கண்டிஷன்.. வழி இல்லாமல் ஓகே சொன்னாரா ஆக்சன்கிங்? - அர்ஜூன் மகள் கல்யாண சீக்ரெட்ஸ்!
Aishwarya Arjun: பிரபலங்களின் வீடுகளில் அப்படி கிடையாது. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும், அது மீடியாக்களில் செய்தியாக மாறிவிடும். - அர்ஜூன் மகள் கல்யாண சீக்ரெட்ஸ்!

Aishwarya Arjun: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில், தம்பி ராமையாவின் மகனான உமா ராமையா போட்டியாளராக களம் இறங்கினார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கினார். அப்போது அர்ஜூனுடன் இருந்த ஐஸ்வர்யாவிற்கும், உமாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நீண்ட நாட்களாக இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். அதன் பின்னர் பெற்றோரிடம் தங்களது காதலை தெரிவித்து சம்மதம் வாங்கினர்.
திருமணம் அரங்கேறியது
இவர்களது திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஹனுமன் கோயிலில் வைத்து பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில், திருமண வரவேற்பு நடந்தது. இதில் முதல்வர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் அதில் பேசும் போது, “சாதாரண வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், பிரபலங்களின் வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு சாதாரண வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பெண், அவள் விரும்பக் கூடிய ஆண்மகனை கல்யாணம் செய்து கொள்ள, அவரது குடும்பத்தார் மறுப்பு தெரிவிக்கும்போது, அங்கு நடக்கும் எந்த பிரச்சினையும், சலசலப்பும் வெளியே தெரியாது. அவையனைத்தும், அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்கும்.
வழி இல்லாமல் ஓகே சொன்னாரா அர்ஜூன்
ஆனால், பிரபலங்களின் வீடுகளில் அப்படி கிடையாது. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும், அது மீடியாக்களில் செய்தியாக மாறிவிடும். இன்னொரு விஷயம் என்னவென்றால், பிரபலங்களின் பிள்ளைகள் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது, அந்த விவகாரத்தை வெளியே தெரியப்படுத்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அப்படி அவர்கள் தெரியப்படுத்தும் பொழுது, பிரபலங்கள் பொதுவெளியில் காண்பிக்கும் முகமும், அவர்களின் உண்மையான முகமும் அப்பட்டமாக வெளியே தெரிந்து விடும். இதனால் வேறு வழியில்லாமல் அவர்களின் பெற்றோர் அவர் பிள்ளைகளின் ஆசைக்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
தம்பி ராமையா கல்யாணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாவை நடிக்க கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார். இந்த கல்யாண பிரமாண்டத்தை பார்த்து, பலரும் அர்ஜுனுக்கு கோடிக்கணக்கில் சொந்து இருக்கும் என்று பலவாறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு பெரிதளவில் சொத்துக்கள் கிடையாது காரணம் என்னவென்றால் அவர் நிறைய சொந்த படங்கள் எடுத்தார். அதில் பெரும்பான்மையான படங்கள் வெற்றி பெறவில்லை.
தம்பி ராமையா மகனுக்கு, அர்ஜுன் மகளா?
இன்னொன்று தம்பி ராமையா மகனுக்கு, அர்ஜுன் மகளா என்ற ரீதியில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான். அர்ஜுன் இதில் வேறு என்ன மாற்று கருத்து சொல்லி விட முடியும். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், அவருடைய பர்சனல் சம்பந்தமான விஷயங்கள் இங்கு செய்தி ஆக்கப்படும். இதனால் அவரது மதிப்பு, மரியாதை குறையும். இன்னொரு விஷயம், இப்போதுள்ள குழந்தைகள் பெரியவர்களின் பேச்சைக் கேட்பதில்லை. அவர்கள் முழுக்க முழுக்க கூகுள் ஆண்டவரே நம்பியே இருக்கிறார்கள். ஆகையால் அங்கு மறுப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்