நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!
‘முள்ளும் மலரும்' படம் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை; என்ன படம் எடுத்திருக்கிறாய்.. ஊமை படம் போல் இருக்கிறது என்று சொல்லி, பயங்கரமாக கோபப்பட்டு விட்டார். - ஜான் மகேந்திரன் பேட்டி!

நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!
கமல்ஹாசனுக்கும், இயக்குநர் மகேந்திரனுக்கும் இடையே இருந்த நட்பு குறித்து மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
ரஜினி படத்திற்கு உதவிய கமல்
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘எல்லோரையும் விட கமல் சாருக்கு தான் என்னுடைய அப்பா மகேந்திரனுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பது முதலில் தெரியும். அவர்தான் மகேந்திரன் பெரிய திரைப்பட இயக்குநராக வருவார் என்று கணித்தார்.