Rio Raj: ‘நாங்க வர்றோம்’.. மீண்டும் வரும் ஜோ ஜோடி.. மீண்டும் கிடைக்குமா அதே வெற்றி” - ரிசண்ட் அப்டேட் இங்கே!
Rio Raj: 'ஜோ' திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
ரியோ ராஜ் - மாளவிகா இணையும் புதிய படம்
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, அந்தப்படத்தில் இடம் பெற்ற ‘உருகி உருகி’ பாடல், இன்றும் பல்வேறு தளங்களில் ஒளிப்பரப்பாகி, மக்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறது. நீண்ட நாட்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த ரியோவிற்கும், ஜோ திரைப்படம் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கதை என்ன?
புதுமுக இயக்குநர் “பிளாக்ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும், இந்த ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.
ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, பிளாக்ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்தப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்து இருக்கிறார். வருண் கே.ஜி.யின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, வினோத் ராஜ்குமாரின் கலை இயக்கத்தை கவனித்துக்கொள்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய படப்பிடிப்பை திட்டமிட்டபடி படக்குழு தற்போது முடித்து இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளை படக்குழு தற்போது துவக்கியுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
ரியோ காதல் கதை
முன்னதாக, சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன் 9, ரெடி ஸ்டெடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.
இதனிடையே சினிமாவிலும் கால் பதித்த ரியோ சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து ஜோ படம் வெளியானது. அந்தப்படம் தொடர்பாக, கலாட்டா யூடியூப் சேனலுக்கு ரியோ ராஜூம், அவரது காதல் மனைவியுமான ஷ்ருதியும் பேட்டி கொடுத்தனர்.
அவர்கள் பேசும் போது, “சண்டை போடாமல் இருந்ததில்லை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், முன்பை விட இப்போதுதான் நிறைய சண்டை போடுகிறோம். சண்டை போட்டால் கூட, எங்களால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியாது. காரணம், எங்களுக்கு அது மிகவும் கஷ்டமாக இருக்கும். எவ்வளவு டைம் எடுத்தாலும், அதனை பேசி பேசியாவது தீர்த்து விடுவோம்.
எங்களுக்குள் தனி தனி ஸ்பேஸ் என்ற ஒன்று இருந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையில், நான் நல்ல மனிதனாக மாறுவதற்கு காரணம், ஷ்ருதிதான். நான் இருக்கும் துறையாலும், நண்பர்களாலும், சுற்றி இருப்பவர்களாலும் நாங்கள் தினமும் நிறைய பிரச்சினைகளை சந்திப்போம். அப்போதெல்லாம், எனக்கு வீட்டிற்கு சென்று இவளிடம் புலம்ப வேண்டும் என்று தோன்றும்.எவ்வளதான் சண்டை இருந்தாலும், தினமும் தூங்க செல்வதற்கு முன்னதாக கட்டிபிடித்து, ஐ லவ் யூ என்று சொல்லிக்கொள்வோம். அது எங்களை பார்த்துக்கொள்ளும்.
இவள் என்னிடம் பலமுறை, நான் உன்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால், நீ நன்றாக இருந்திருப்பாய் என்று கேட்பாள், அந்த கேள்வி எனக்கு பிடிக்காது. நான் பலமுறை நீ வந்ததினால்தான் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ரியோவை திருமணம் செய்யும் பலரும் இவன் நிரந்தரமில்லாத துறையில் இருப்பதாக பேசினர். ஆனால், எனக்கு இவன் நம்பிக்கை இருந்தது!” என்று பேசினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்