Singapenne Serial: ஆபத்தில் அன்பு அம்மா.. பதறிப்போன ஆனந்தி.. ஓடி வந்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Singapenne Serial: அன்பு அம்மாவிற்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக ஆனந்தி அன்புவுக்கு தகலல் கொடுத்துள்ளார்.
Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை காதலிப்பதால் தன் அண்ணன் மகள் துளசியை அன்பு திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறிவிட்டான். இதனால் கோவத்தில் இருந்த அன்பு அம்மா, அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். அவரை சமாதாளம் செய்ய அன்புவும் அவரது தங்கையும் பல முயற்சி எடுத்தும் எல்லாம் வீணாக போனது.
அன்புவை வருத்தப்பட செய்த அம்மா
இந்நிலையில், அன்பு அவரது அம்மா மார்க்கெட் போவதை அறிந்து நானும் உங்களுடன் வரேன் எனக் கூறி உள்ளார். ஆனால், அவரது அம்மாவோ அவரை உதாசினப்படுத்தி பாத்திரங்களை தூக்கி எறிந்து கோவத்தை வெளிப்படுத்தி சென்றார். இதனால் வருத்தத்தில் இருந்த அன்புவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அன்பு அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சைக்கிளில் வந்த ஆனந்தி அவரைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த ஆனந்தி, ஒரு முடிவெடுத்து அவரிடம் பேச முயன்றார்.
அன்பு அம்மாவிற்கு ஆபத்தா?
அந்த சமயத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டு காத்திருந்த 2 பேர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதலில் இவர்கள் ஆனந்தியை கடத்த தான் வந்திருப்பார்களோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில் பார்த்தால் அன்பு அம்மாவை இவர்கள் தாக்கி உள்ளனர்.இதை அறிந்த ஆனந்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அன்புவிற்கு தகவல் கொடுத்தாள்,
மருத்துவமனையில் அன்பு அம்மா
நடந்த சம்பவத்தின் பதற்றம் குறையாத ஆனந்தியின் குரலைக் கேட்டு பயந்த அன்பு உடனடியாக அவரது தங்கையை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். பின் இருவரும் சந்தித்த போது ஆனந்தி நடந்த விஷயங்களை கூறினார்.
அந்த நிலையில், மருத்துவமனையில் பைக் டாக்சி டைரவரும் இருந்தான். நேற்றைய எபிசோடில், இவரிடம் பைக் ரைடு புக் செய்வது போல ஒருவர் நடித்து, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துவிட்டு சென்றான். பின் இவரை கத்தியைக் காட்டி மிரட்டி பைக்கை ஓட்டச் சொன்னான். அந்த குற்ற உணர்வில் இருந்தவன் நடந்த சம்பவம் குறித்து ஆனந்தி அன்புவிடம் கூறுவானா என்பதை பார்க்கலாம்.
அன்பு ஆனந்திக்காக நின்ற மகேஷ்
இதற்கிடையில், அன்புவும் ஆனந்தியும் சேர்ந்தது போல் கார்மெண்ட்சிற்கு லீவ் சொல்லி உள்ளதால் அங்கு சில பிரச்சனை நடந்தது. இந்த சமயத்தில் அங்கு வந்த மகேஷ், அவர்கள் இருவரும் இன்று வேலைக்கு வரமாட்டார்கள் என கூறினான். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மகேஷ் செய்த கலாட்டா
முன்னதாக, மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.
அன்பு மூலம் செல்லும் தூது
இந்நிலையில், அடுத்த நாள் கார்மெண்ட்ஸ் வந்த ஆனந்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் தவித்த மகேஷ் அன்பு மூலம் ஆனந்தியை சந்திக்க திட்டமிட்டார். ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் தன்னை சந்திக்க கூட்டிக் கொண்டு வருமாறு மகேஷ் அன்புவிடம் கெஞ்சினார்.
குற்ற உணர்ச்சியில் மகேஷ்
தன் காதலை ஏற்க மறுத்ததை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் மகேஷ் சார் குடித்து விட்டு அப்படி செய்தார். அவர் ஹாஸ்டலில் வந்து கலாட்டா செய்ததை நினைத்து வருந்துகிறார் என அன்புவும் மகேஷ் சாருக்கு ஆதரவாக ஆனந்தியிடம் பேசுகிறான். இது ஆனந்திக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது.
டாபிக்ஸ்