Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Jan 09, 2025 12:30 PM IST

Karthigai Deepam Serial: மாயாவின் திட்டப்படி, டாக்டர் பந்தக்கால் விழாவிற்கு வரும் வழியில் மயக்கமடைந்து விபக்கில் சிக்கியுள்ளார்.

Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

மாயா திட்டம்

பந்தக்கால் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக மாயா கிளம்பி வருகிறாள். இங்கே டாக்டர் கிளம்பி கொண்டிருக்க மாயா டாக்டர் காரில் குளோரோபார்மை வைத்து விடுகிறாள். இதனால் டாக்டர் வரும் போது மயங்கி விடுவார். அதன்மூலமாக அவரை தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டம் போடுகிறாள்.

மூடநம்பிக்கை இல்லை

அடுத்து மாயா சாமுண்டீஸ்வரிக்கு வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்து பிறகு சரி பந்தக்கால் நட்டுவிடலாம் என முடிவு செய்கிறாள். மாயா ஒதுங்கி நிற்க சாமுண்டேஸ்வரி நீ விதவை என்பதால் ஒதுங்கி எல்லாம் நிற்க வேண்டாம் என்று சொல்கிறாள்.

மேலும் எனக்கு அந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் உடன்பாடில்லை என சொல்லி மாயாவை பந்தக்கால் நட அழைக்கிறாள். நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிய மறுபக்கம் மாயாவின் திட்டத்தின் படி டாக்டர் வந்த கார் விபத்தில் சிக்குகிறது.

ஷாக் ஆன சாமுண்டீஸ்வரி

சாமுண்டீஸ்வரி டாக்டருக்கு போன் செய்ய போன் எடுக்காத நிலையில் அடுத்து நர்ஸ் போனை எடுத்து அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மருத்துவமனையில் கார்த்திக்

முன்னதாக, கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் சேட்டுவின் குழந்தையை மருத்துவமனையில் கொண்டு வந்து அட்மிட் செய்ய, சேட்டுவின் மனைவி போன் செய்து கலசத்தைக் கொண்டு வாங்க, அதனால் தான் எல்லா பிரச்சினையும் என்று கூறினாள். இதையடுத்து கலசத்தைக் கொடுத்தவரிடம் சேட்டு அதனை திரும்ப. கேட்க, அவர்கள் கொடுக்க முடியாது என கூறி விடுகின்றனர்.

என்ன கலசம்

சேட்டுவின் மனைவி கலசம் குறித்து பேசுவதை கேட்ட கார்த்திக், என்ன கலசம் என்று விசாரிக்க, அந்த பெண்மணி நடந்தது அனைத்தையும் குறித்து கூறினாள். பிறகு சேட்டுவும் அங்கு வந்து விட, கலசத்தை மீண்டும் வாங்குவதற்காக குடோனுக்கு சென்றனர்.

மறுபக்கம், சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக்காக காத்திருக்க சந்திரகலா, அந்த ட்ரைவரெல்லாம் திரும்ப வர மாட்டான்.. அவன் தான் இதை திட்டம் போட்டு செய்தது என சொல்ல, மயில்வாகனம் உள்ளிட்டோர் கார்த்திக் வந்து விடுவான் என உறுதியாக பேசுகின்றனர்.

விருந்து கொடுக்கும் சாமுண்டீஸ்வரி

இங்கே குடோனுக்கு வந்து கலசத்தை கேட்க, அந்த வெளிநாட்டு நபர் கொடுக்க முடியாது என சொல்ல, கார்த்திக் போலீசை கூப்பிடுவேன் என மிரட்டி வாங்கி வருகிறான். இங்கே கலசத்தை கொண்டு செல்வதற்காக ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர்

பின், சிவணானண்டி முன்னிலையில் தன் மானத்தை காப்பாற்றிய கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க நினைத்துள்ளார் சாமுண்டீஸ்வரி. இதையடுத்து சீரியலில் நடக்கப்போவது என்ன என்பதை அறிய ஜி தமிழ் சேனலைப் பாருங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.