'நான் உன்ன மட்டும் தான் நம்புவேன்' போதையிலும் வசனம் பேசிய மகேஷ்.. புலம்பும் அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ஆனந்தி, அன்புவை காதலிப்பதை அறியாத மகேஷ், தான் அன்புவை மட்டும் தான் நம்புவதாக கூறியதால் அன்பு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.

'நான் உன்ன மட்டும் தான் நம்புவேன்' போதையிலும் வசனம் பேசிய மகேஷ்.. புலம்பும் அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தன் காதலை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மனமுடைந்த மகேஷ், நன்றாக குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டல் முன் வந்து நின்று கலாட்டா செய்கிறார்.
மகேஷ் செய்த கலாட்டா
மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.