மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

Malavica Natarajan HT Tamil
Jan 04, 2025 06:53 AM IST

தன் காதலை ஏற்க மறுத்த ஆனந்தி மீதுள்ள கோவத்தை தாங்க முடியாமல் குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டலுக்கு வந்து அடாவடி செய்துள்ளான் மகேஷ்.

மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

ஆனந்தியிடம் கெஞ்சிய அன்பு

அதுமட்டுமல்லாமல், மகேஷ் சாருடன் விளையாடும் இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறும், இதற்கு மேல் தன்னால் முடியாது என்றும் ஆனந்தி எத்தனை முறை கூறினாலும் மகேஷ் சார் பிறந்தநாள் முடியும் வரை மட்டும் பொறுத்துக் கொள்ளுமாறு அன்பு ஆனந்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மேலும், மகேஷ் சாரின் பிறந்தநாள் முடிந்த பின் நானே நம் காதலை கூறிவிடுகிறேன். இந்த நாளில் அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அன்பு திட்டவட்டமாக கூறினான். அதற்குள் ஆனந்தியிடம் மகேஷ் காதலை சொல்லாமல் தடுக்க வேண்டும் என மித்ரா ஒருபக்கம் துடித்துக் கொண்டிருந்தாள்.

காதலை சொன்ன மகேஷ்

இத்தனை பேரில் தவிப்பிற்கு மத்தியிலும், மகேஷ் ஆனந்தியை தனியா மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, மண்டியிட்டு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த ஆனந்தியால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என நினைத்து, தான் அன்புவைத் தான் காதலிப்பதாக கூறினாள்.

இந்த அதிர்ச்சியை ஏற்க முடியாத மகேஷ் தடுமாறினான், பின் செய்வது அறியாது நின்றான்.

நிதானம் இழந்த மகேஷ்

இந்நிலையில், தன் காதலை ஏற்க மறுத்த ஆனந்தி மேல் உள்ள கோவத்தை அடக்க முடியாமல் நிற்க கூட முடியாத அளவிற்கு குடித்துள்ளான்.

அந்த சமயத்தில், ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு வந்து பிரச்சனையும் செய்கிறான். ஹாஸ்டல் வாட்ச் மேனை தாக்கி, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன் ராத்திரி நேரத்தில் கத்தி கூச்சலடுகிறான்.

கோவத்தில் கத்திய மகேஷ்

இதை எல்லாம் பார்த்து செய்வது அறியாமல் தவித்த ஆனந்தி., எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினாள்.

நிலைமையை சமாளிக்க முயற்சித்த மித்ரா, அம்மாவும் அப்பாவும் உன்னை தேடுவாங்க. வீட்டுக்கு போ மகேஷ் என மித்ரா சொல்ல, என்னைத் தொடாதே. முதலில் கையை எடு என உதறி விட்டு மித்ராவையும் அசிங்கப்படுத்தினான்.

ஹாஸ்டலுக்கு வந்த அன்பு

நிலைமை கட்டுக்குள் அடங்காததால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வர சொல்லினர். இதைக் கேட்ட ஆனந்திக்கு மேலும் பதற்றம் அதிகரித்தது. இது பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் என நினைத்து பயந்தார். இதைக் கேட்ட மகேஷ், வரட்டும் அன்பு இங்க வரட்டும் என கோவத்தில் கத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஹாஸ்டலுக்கு அன்பு வர அவரை மகேஷ் கோவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.