Singapenne Serial: ஆனந்திக்காக தவிக்கும் மகேஷ்.. வேணுவுக்கு நம்பிக்கை தரும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே அப்டேட்
Singapenne Serial: ஆனந்தி தன்னை விட்டு அதிகமாக விலகிப் போவதாக மகேஷ் ஹாஸ்டல் வார்டனிடம் புலம்புகிறான்.

Singapenne Serial: மகேஷ், அவரது பிறந்த நாளில் ஆனந்தியிடம் காதலை சொல்ல பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், ஆனந்தி அதிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க, விடாப்பிடியாக தன் காதலை சொன்னார். ஆனால், ஆனந்தி மகேஷின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தான் எப்போதும் உங்களை காதலிக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறினார்.
ரகளை செய்த மகேஷ்
இதனால், மனம் தாங்க முடியாத மகேஷ், ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார். அவரை ஆனந்தியும், மித்ராவும் சமாதானம் செய்தும் அங்கிருந்து நகர வைக்க முடியவில்லை. பின், அன்பு அந்த சமயத்தில் வந்து உதவினார்.
வார்டனிடம் உதவி
பின், தன் தவறை உணர்ந்த மகேஷ், ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஹாஸ்சல் வார்டனிடமும் மன்னிப்பு கேட்டார். அத்துடன், என்னையும் ஆனந்தியையும் எப்படியாவது ஒன்றாக சேர்த்து வைத்து விடுமாறு ஹாஸ்டல் வார்டனிடம் கோரிக்கையும் விடுத்தார்.
இதற்கு ஹாஸ்டல் வார்டனும் சம்மதம் தெரிவித்தார். காரணம். மகேஷ், ஹாஸ்டல் வார்டனின் மகன் என்பதால் தான். ஆனால், மகேஷ் உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டனின் மகன் தானா, அப்படி என்றால் ஏன் அவர்கள் பிரிந்தார்கள் என்ற கதை எல்லாம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
சந்தேகத்தில் மகேஷ் அம்மா
இந்நிலையில், மகேஷ் அடிக்கடி ஹாஸ்டல் வார்டனைப் பார்க்க வருவதும், அவரிடம் தனியாக பேசுவதும் அதிகரிக்கத் தொடங்கியது . இவர்கள் எதர்காக சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என தெரியாத மித்ரா, மகேஷின் அம்மாவிடம் தகவல் கூறினார். இதனால், மகேஷின் நடத்தை குறித்து அவரது அம்மாவிற்கு சந்தேகம் வந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் மகேஷ் ஹாஸ்டல் வார்டனை சந்திக்க வந்துள்ளார். அப்போது, ஹாஸ்டல் வார்டனிடம் தன் மனக் குமுறலைக் கொண்டித் தீர்த்துள்ளார். ஆனந்தி, தன்னை விட்டு வெகுதூரம் சென்றதாக அவர் புலம்புகிறார். இதை ஹாஸ்டல் வார்டனும் கேட்டுக் கொண்டிருக்கிறார்,
வேணுவிற்கு நம்பிக்கை தரும் ஆனந்தி
இந்நிலையில், செயின் திருடர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற வந்த வேணு அண்ணனை எப்படியாவது குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக கோயிலில் வைத்து ஆனந்தி சத்தியம் செய்து தருகிறாள். அத்துடன், ஊரில் அக்காவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் விவரத்தை சொல்கிறாள்.
உண்மை அறியும் அன்பு அம்மா
இதற்கிடையில், செயின் திருடர்களால் தான் காயமடைந்து மருத்துவமனையில் இருந்த போது, தன்னை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்துக் கொண்டது தன் மகள் அல்ல என்பதையும் அன்பு அம்மா கண்டுபிடித்தார். இதையடுத்து, அவர் ஆனந்தி தான் தன்னுடன் இருந்தது என்று கண்டுபிடிப்பாரா , ஆனந்தி மீது உள்ள கோவத்தை தவிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரவுடிகளிடம் சிச்கிய ஆனந்தி
அன்பு அம்மாவிடம் செயின் திருடிய நபர்கள் குறித்து தெரிந்து கொள்ள அன்புவும் ஆனந்தியும் போலீஸ் ஸ்டேஷனிற்கும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கும் அழைந்து திரிந்து வந்தனர். பின் ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்து செயினை ஒரு வழியாக வாங்கினர்.
கத்தி முனையில் ஆனந்தி
அந்த சமயத்தில், அங்கு மறைந்திருந்த போலீஸ் செயினை வாங்கும் சமய்த்தில் வந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத செயின் திருடர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆனந்தியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர். மேலும், அவரைக் கத்தி முனையில் கடத்திச் சென்று மிரட்டி வருகின்றனர்.
எலும்பை எண்ண வந்த அழகன்
ஆனால், இவை எதற்கும் பயப்படாத ஆனந்தி, என்னை கடத்தியவர்களிடமிருந்து காப்பாற்ற என் அழகன் வருவான். அவன் என்னை உங்களிடமிருந்து காப்பாற்ற உங்கள் எலும்பை எல்லாம் எண்ணுவான் என்றும் கூறினார். அவரின் நம்பிக்கையை காப்பாற்ற அங்கு வந்த அழகன் ஆனந்தியை கடத்தி வந்தவர்களை எல்லாம் சண்டை போட்டு பந்தாடினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்