Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..

Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..

Malavica Natarajan HT Tamil
Jan 27, 2025 07:43 AM IST

Singapenne Serial: ஆனந்தியை கத்தி முனையில் கடத்தியவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் அழகன்.

Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..
Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..

ஆனந்தி கழுத்தில் கத்தி

போலீஸ் ஸ்டேஷனிற்கும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கும் அழைந்து திரிந்து வந்தனர். பின் ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்து செயினை ஒரு வழியாக வாங்கினர்.

அந்த சமயத்தில், அங்கு மறைந்திருந்த போலீஸ் செயினை வாங்கும் சமய்த்தில் வந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத செயின் திருடர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆனந்தியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர். மேலும், அவரைக் கத்தி முனையில் கடத்திச் சென்று மிரட்டி வருகின்றனர்.

எலும்பை எண்ண வந்த அழகன்

ஆனால், இவை எதற்கும் பயப்படாத ஆனந்தி, என்னை கடத்தியவர்களிடமிருந்து காப்பாற்ற என் அழகன் வருவான். அவன் என்னை உங்களிடமிருந்து காப்பாற்ற உங்கள் எலும்பை எல்லாம் எண்ணுவான் என்றும் கூறினார். அவரின் நம்பிக்கையை காப்பாற்ற அங்கு வந்த அழகன் ஆனந்தியை கடத்தி வந்தவர்களை எல்லாம் சண்டை போட்டு பந்தாடினார்.

எதிர்பார்க்காத சமயத்தில் வந்த உதவி

அந்த சமயத்தில் அன்புவை பின்னால் இருந்து ஒருவர் கத்தியால் குத்த வந்தார். இதை அன்புவும் ஆனந்தியும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் இனி என்ன ஆகுமோ என பதற்றத்தில் இருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக அங்கு வந்த வேணு அன்புவை கத்தியால் குத்த வந்தவரை எட்டி உதைத்து காப்பாற்றினார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

வார்டனை சந்தித்த மகேஷ்

முன்னதாக, இதனால், இவர் அடிக்கடி ஹாஸ்டல் வார்டனை சந்திக்க வருகிறார். இதை பார்த்த மித்ரா, மகேஷிடம் கேள்வி கேட்க மகேஷ் அதற்கு கோவமாக பதில் கூறினான், நான் எதற்கு வந்தேன் என உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது என்னோட பர்சனல் என கோவப்பட்டான்.

சந்தேகத்தில் மகேஷ் அம்மா

இதனால், சந்தேகமான மித்ரா, மகேஷின் நடவடிக்கைகள் குறித்து அவரது அம்மாவிடம் கூறினார். இதைக் கேட்டு ஷாக் ஆன மகேஷ் அம்மா, ஒரு வார்டன் லேடிக்கும் என் பையன் மகேஷிற்கும் என்ன பர்சனல் வேண்டி இருக்கு என மித்ராவிடம் கேள்வி எழுப்பினார். இவர்கள் இதுபற்றி ஏதும் தெரியாமல் மகேஷின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்தனர்.

முழு மூச்சாக இறங்கிய அன்பு ஆனந்தி

இந்நிலையில், அன்புவின் அம்மாவிடம் செயின் பறித்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அன்புவும் ஆனந்தியும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அன்புவும் ஆனந்தியும் அந்த பைக் டாக்ஸி டிரைவரின் உதவியுடன் அவர்களை தேடி வருகின்றனர். பின், ஆனந்தி செயின் திருடர்களை எப்படி பிடிக்கலாம் என ஆனந்தி திட்டம் தீட்டி வந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.