Singapenne Serial: குற்ற உணர்ச்சி இல்லாத கருணாகரன்.. பாடம் எடுக்க நினைக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: கார்மெண்ட்சில் வேலை செய்யும் நபருக்கு அவசர உதவி தேவைப்பட்டும் அதை செய்ய மறுத்த கருணாகரனுக்கு பாடம் புகட்ட ஆனந்தி விரும்புகிறாள்.

Singapenne Serial: அன்பு அம்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அன்புவும் ஆனந்தியும் மீண்டும் காராமெண்ட்சிற்கு வேலைக்கு வந்தனர். அப்போது, கருணாகரன் அவர்கள் இருவரையும் வேண்டுமென்றே வம்பிழுத்தார். அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்றாலும் கம்பெனிக்கு வேலைக்கு வருவது பெரிய விஷயம் என்றும் நக்கலாக பேசினார்.
கண்டுகொள்ளாத கருணாகரன்
இதற்கிடையில், கார்மென்ட்சிஸ் வேலை செய்த ஒருவருக்கு ஷாக் அடித்து கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற பணியாளர்கள் உதவினர், அதைப் பார்த்த கருணாகரன், அவனுக்கு முதலுதவி எல்லாம் தேவையில்லை. அப்படியே விட்டாலே சரி ஆகிடுவான் எனக் கூறி அவரை மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல மறுத்தான்.
மித்ராவுக்கு வந்த தகவல்
ஆனால், நேரம் ஆக ஆக அந்த நபர் எந்த உணர்சச்சியும் இல்லாமல் கிடந்தார். இதைப்பார்த்த மற்ற பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் இன்னும் கண் முழிக்காமல் உள்ளதாக கருணாகரனிடமும் மித்ராவிடமும் கம்பெனி ஊழியர் கூறினார்.
பாடம் எடுக்க நினைத்த ஆனந்தி
இதைக் கேட்ட ஆனந்தி, அவர் அங்கு படுத்த படுக்கையாக இருக்க காரணமே கருணாகரன் தான். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று திட்டினார். எப்படியும், மித்ரா கருணாகரனுக்கு சப்போர்ட் செய்து ஆனந்திக்கு எதிராக தான் நிற்பார் எனத் தெரிந்ததால், அங்கு வேலை செய்யும் அனைவரும் திட்டம் தீட்டி கருணாகரனை வழுக்கி விழ வைத்து அடிபட வைக்க எண்ணினர். அதை செய்தும் காட்டினர். இது குறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
ஹாஸ்டல் வார்டனை குறிவைக்கும் மித்ரா
முன்னதாக, ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன், அவரது குழந்தையின் விளையாட்டு பொருட்களை வைத்து அவ்வப்போது பேசி வந்த நிலையில், மகேஷ் தான் அவரது மகன் என அவர் கூறி வருகிறார். இதனால், ஆனந்தி மேல் மகேஷ் வைத்திருக்கும் காதலுக்காகவும், தன் மகன் தன்னிடம் கேட்ட உதவிக்காகவும் எப்படியாவது ஆனந்தியை மகேஷுடன் சேர்த்து வைக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறாள்.
புலம்பும் வார்டன்
இதற்குள் ஆனந்தியை பழிவாங்கத் துடிக்கும் மித்ரா, ஹாஸ்டல் வார்டனின் அறையில் இருக்கும் அந்த குழந்தையின் விளையாட்டுப் பொருட்களை திருடிச் செல்கிறாள். இதையறிந்து பதற்றமடைந்த வார்டன், ஆனந்தியிடம் அதைச் சொல்லி புலம்புகிறாள்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா ஆனந்தியை இந்த விளையாட்டு பொருட்களை எல்லாம் வைத்து எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என திட்டம் தீட்டுகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அன்புவை வருத்தப்பட செய்த அம்மா
முன்னதாக, அன்பு அவரது அம்மா மார்க்கெட் போவதை அறிந்து நானும் உங்களுடன் வரேன் எனக் கூறி உள்ளார். ஆனால், அவரது அம்மாவோ அவரை உதாசினப்படுத்தி பாத்திரங்களை தூக்கி எறிந்து கோவத்தை வெளிப்படுத்தி சென்றார். இதனால் வருத்தத்தில் இருந்த அன்புவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அன்பு அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சைக்கிளில் வந்த ஆனந்தி அவரைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த ஆனந்தி, ஒரு முடிவெடுத்து அவரிடம்பேசமுயன்றார்.
அன்பு அம்மாவிற்கு ஆபத்தா?
அந்த சமயத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டு காத்திருந்த 2 பேர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சைன் திருடர்கள் அன்பு அம்மாவை தாக்கினர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்