Kayal Serial: குடும்பமே குமுறிட்டு இருக்கும் போது ரொமான்ஸ் செய்யும் கயல்- எழில்.. ஆத்திரத்தில் கத்தும் சரவண வேலு..
Kayal Serial: தேவியின் நிலையை நினைத்து குடும்பமே கதறிக் கொண்டிருக்கும் நிலையில் கயலும் எழிலும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

Kayal Serial: அன்பு வீட்டிற்கு தெரியாமல் ஷாலினியை அவசர அவசரமாக கல்யாணம் செய்ததால் கோவமடைந்த வேதவள்ளி, தன் மகளின் வாழ்க்கை சீரழிந்ததாகக் கூறி தேவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
தவிக்கும் தேவி
தேவிக்கு வளைகாப்பு செய்ய ஆசை ஆசையாய் கயல் குடும்பத்தினர் இருந்த நிலையில், குட்டையை குழப்பி தேவியின் வாழ்க்கையை சீரழித்த அன்பு மேல் எல்லாரும் கோவமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவனையும் ஷாலினியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அசிங்கப்படுத்திய வேதவள்ளி
இந்நிவையில், மருத்துவமனையில் இருக்கும் தேவியின் கணவர் விக்னேஷை பார்க்க சென்ற கயல் குடும்பத்தையும் வேதவள்ளி அசிங்கப்படுத்தி அனுப்பி இருப்பார்.
இந்த நிலையில், விக்னேஷிற்காக மீண்டும் வேதவள்ளியிடம் பேசிய தேவியை வேதவள்ளி மிக மோசமாக திட்டியுள்ளார். அத்துடன், தேவிக்கும் விக்னேஷிற்கும் இருந்த உறவு முற்றிலும் உடைந்து போய்விட்டதாகவும் இனி இவர்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
வாக்கு கொடுத்த கயல்
இதை தாங்கிக் கொள்ள முடியாத தேவி வீட்டில் கதறி அழுதார். அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினரும் மிகவும் வருத்தமாகினர். முன்னதாக, நின்று போன தேவியின் வளைகாப்பை மீண்டும் நடத்துவதாகவும் அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் நிச்சயம் வருவார் என்றும் கயல் வாக்கு கொடுக்கிருந்தார்.
கோவத்தில் சரவண வேலு
இது இப்படி இருக்க, சரவண வேலுவை கன்னத்தில் அறைந்து கயல், வீட்டை விட்டு லெளியே அனுப்பியதை தங்கிக் கொள்ள முடியாமல், கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரித்து தனக்கு மனைவியாக்க போவதாகவும், குறுக்கே யார் வந்தாலும் அவர்களை உருத் தெரியாமல் ஆக்கி விடுவதாகவும் அவரது சித்தப்பாவிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தான்.
கயல் ரொமான்ஸ்
ஆனால், இதை எல்லாம் அப்படியே தள்ளி வைத்துவிட்டு கயலும் எழிலும் தங்களது அறையில் ரொமான்ஸ் செய்து விளையாடி வருகின்றனர். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
குடும்பத்தை தவிக்க வைத்த அன்பு
முன்னதாக, கயல் சீரியலில் வீட்டில் இருக்கும் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்பு ஷாலினியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்தான். இதை அறிந்த அன்பு குடும்பமும் ஷாலினி குடும்பமும் இவர்கள் இருவரையும் தேட முயற்சித்த நிலையில், கயல் அவர்களை கண்டுபிடித்தார்.
உங்களுக்கு நான் தான் பிரச்சனை
ஆனால், கயலின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத அன்பு, வீட்டில் தேவி, நீ எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான். ஆனால் நான் காதலித்தால் மட்டும் உங்களுக்கு எல்லாம் பிரச்சனை தான். இந்த வீட்டில் தேவி மட்டும் தான் பிறந்தாளா. நான் எல்லாம் என் ஆசையை நிறைவேற்றவே கூடாதா என அன்பு அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினான்.
ஆதங்கப்பட்ட காமாட்சி
இதனால் பொறுமை இழந்த கயல் அம்மா, கயல் இந்த குடும்பத்திற்காக செய்த தியாகங்களை அன்புவிடம் சொல்லி ஆதங்கப்பட்டாள். இதற்குள் வீட்டில் நடந்த குழப்பங்களால் தேவி மிகவும் மனம் உடைந்த நிலையில், அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கமடைந்தாள். இதைப் பார்த்த கயல் என்ன செய்வது என்ற பதற்றத்தில் தேவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள்.
தவிக்கும் கயல்
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தேவியின் வளைகாப்பில் நடந்த குளறுபடி, அன்புவின் திருமணம், தன்னை மட்டும் இல்லாமல் தன் உடன் பிறந்தவர்களை நாசமாக போவார்கள் என தம் அம்மாவை வேதவள்ளி சாபமிட்டது, தெருவில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியது என எல்லாமே கயலின் கண் முன்னே வந்து வந்து சென்றது.

டாபிக்ஸ்