Singapenne Serial: வார்டன் ரூமிலே கை வைத்து வேலையை ஆரம்பித்த மித்ரா.. ஆனந்தியிடம் புலம்பும் வார்டன்..
Singapenne Serial: ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் வைத்திருந்த குழந்தையின் விளையாட்டு பொருட்களை மித்ரா அவரது அறைக்கே சென்று திருடிய சம்பவம் நடந்துள்ளது.

Singapenne Serial: வார்டன் ரூமிலே கை வைத்து வேலையை ஆரம்பித்த மித்ரா.. ஆனந்தியிடம் புலம்பும் வார்டன்..
Singapenne Serial: அன்புவிற்கு துளசியுடன் நடந்த திருமண நிச்சயதார்த்த விழா நின்று போனதால், அன்புவிடம் பேசுவதையே அவரது அம்மா நிறுத்திக் கொண்டார். அன்பு, தன் அம்மாவை எவ்வளவோ சமாளிக்க முயன்றும் அது முடியாமல் போனதால், வருத்தத்தில் இருந்தார்.
அன்பு அம்மாவிற்காக உருகும் ஆனந்தி
அந்த சமயத்தில் செயின் பறிப்பாளர்கள் 2 பேர் அன்பு அம்மாவின் கழுத்தில் இரு்த செயினை பறிக்க முயற்சி செய்தனர். இதில், அன்பு அம்மாவிற்கு பலத்த அடி பட்டது. இதைப் பார்த்த ஆனந்தி, அவரை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொண்டார்.
இருந்தாலும், தன்னை காப்பாற்றி இரவு முழுவதும் கண் முழித்து, கடவுளிடம் பரிகாரம் செய்து காப்பாற்றியது ஆனந்தி தான் எனத் தெரியாததால் அன்பு அம்மா தற்போதும் ஆனந்தி மீது கோபமாகத் தான் இருக்கிறார்கள்.
