Kayal Serial: அதிகமாகும் போராட்டம்.. வேலுவை நம்பி ஏமாற்றம்.. வாக்கு கொடுக்கும் கயல்.. கயல் சீரியல் அப்டேட்
Kayal Serial: அன்பு- ஷாலினி கல்யாணத்தால் வாழ்க்கையில் சுற்றி சுற்றி அடிக்கும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கயல் தவித்து வருகிறாள்.

Kayal Serial: கயல் அன்பு மற்றும் ஷாலினியின் காதலை சேர்த்து வைப்பதாகக் கூறியும் அவர்கள் இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனால், ஷாலினியின் அம்மா வேதவள்ளி கயலையும் அவளது குடும்பத்தையும் மிகவும் கேவலமாக பேசி வந்தார். அத்துடன், ஆசை ஆசையாய் தங்கை தேவிக்கு வளைகாப்பு செய்ய நினைத்த குடும்பத்தினருக்கு வந்து விழுந்தது இடி.
வீட்டை விட்டு துரத்திய வேதவள்ளி
அன்பு, ஷாலினியை இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்ததால், தேவியை வேதவள்ளி வீட்டை விட்டே துரத்திவிட்டாள். இதை தாங்கிக் கொள்ள முடியாத தேவி, ஏக்கத்தில் மயங்கி விழுந்து விட்டார். அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தும் அவரைப் பார்க்க விக்னேஷ் தயக்கம் காட்டினார்.
சரவண வேலுவால் பிரச்சனை
இந்நிலையில், கயல் குடும்பம் தங்களது சோகத்தை மறைக்க குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட நினைத்தனர். அப்போது, தான் எழில் எவ்வளவு கூறியும் சரவண வேலு மீது நம்பிக்கை வைத்து கயல் அவனை வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு சரவண வேலு பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கயல், குடும்பத்தார் முன்னிலையில் சரவண வேலுவை கன்னத்தில் அறைந்தார். அதுமட்டுமின்றி, இனி வாழ்நாள் முழுவதும் என் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்றும் கூறி வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
அழுது புலம்பும் தேவி
இதையடுத்து, மருத்துவமனையில் இருக்கும் விக்னேஷை நினைத்து நினைத்து தேவி அழுது கொண்டிருக்கிறாள். அவரை பார்க்கச் சென்ற கயலையும், எழிலையும் வேதவள்ளி அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மேலும், மூர்த்தியை அசிங்கப்படுத்தியும் உள்ளார்.
இதையறிந்த தேவி இன்னும் அழுவதை பார்க்க முடியாத கயல், எப்படியாவது விக்னேஷை தேவியுடன் சேர்த்து வைப்பேன் எனவும், உனக்கு நடைபெறும் வளைகாப்பு அன்று இங்கு விக்னேஷ் இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால் தேவி சற்று ஆறுதல் அடைந்தாலும், விக்னேஷை நினைத்து உருகி வருகிறாள். வீட்டில் நடக்கும் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் பார்த்து கயல் தன்னை சுற்றி சுற்றி வரும் போராட்டத்தால் மனம் நொந்து போயிருக்கிறார்.
குடும்பத்தை தவிக்க வைத்த அன்பு
முன்னதாக, கயல் சீரியலில் வீட்டில் இருக்கும் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்பு ஷாலினியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்தான். இதை அறிந்த அன்பு குடும்பமும் ஷாலினி குடும்பமும் இவர்கள் இருவரையும் தேட முயற்சித்த நிலையில், கயல் அவர்களை கண்டுபிடித்தார்.
உங்களுக்கு நான் தான் பிரச்சனை
ஆனால், கயலின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத அன்பு, வீட்டில் தேவி, நீ எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான். ஆனால் நான் காதலித்தால் மட்டும் உங்களுக்கு எல்லாம் பிரச்சனை தான். இந்த வீட்டில் தேவி மட்டும் தான் பிறந்தாளா. நான் எல்லாம் என் ஆசையை நிறைவேற்றவே கூடாதா என அன்பு அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினான்.
ஆதங்கப்பட்ட காமாட்சி
இதனால் பொறுமை இழந்த கயல் அம்மா, கயல் இந்த குடும்பத்திற்காக செய்த தியாகங்களை அன்புவிடம் சொல்லி ஆதங்கப்பட்டாள். இதற்குள் வீட்டில் நடந்த குழப்பங்களால் தேவி மிகவும் மனம் உடைந்த நிலையில், அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கமடைந்தாள். இதைப் பார்த்த கயல் என்ன செய்வது என்ற பதற்றத்தில் தேவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள்.
தவிக்கும் கயல்
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தேவியின் வளைகாப்பில் நடந்த குளறுபடி, அன்புவின் திருமணம், தன்னை மட்டும் இல்லாமல் தன் உடன் பிறந்தவர்களை நாசமாக போவார்கள் என தம் அம்மாவை வேதவள்ளி சாபமிட்டது, தெருவில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியது என எல்லாமே கயலின் கண் முன்னே வந்து வந்து சென்றது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்