Villain Actor Vinayagan: பொது வெளியில் ஆபாசம்! மன்னிப்பு கேட்ட ரஜினி பட வில்லன்..
Villain Actor Vinayagan: தனது பணியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த நடிகர் விநாயகன் ஆபாசமாக பேசி நடந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.

Villian Actor Vinayagan: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மற்றும் சமீபத்தில் வெளியான மிகவும் வன்முறை நிறைந்த மலையாளப் படமான மார்கோலில் நடித்து பிரபலமானவர் விநாயகன். இவர் குடித்து விட்டு மோசமாக நடந்துகொண்டதாக சில பிரச்சனைகள் வெளியான நிலையில் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பணியாளருடன் வாக்குவாதம்
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற விநாயகன், தன் வீட்டில் தனது பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமமூக வலைத்தளங்களில் வைரலாகின.
விநாயகனின் அதிர்ச்சி வீடியோ
தனது வீட்டு பால்கனியில் இருந்த விநாயகன், பணியாளருடன் சண்டையிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் ஆபாசமாக நடந்து கொள்வதும் வீடியோவில் காணப்படுகிறது. குடி போதையிலேயே பேசிக் கொண்டிருந்தவர் சிறிது நேரத்தில் கீழே விழுந்து மீண்டும் எழுந்தார். அப்போதும் நிதானமின்றி கூச்சலிட்டார்.
அத்துடன் இணையத்தில் வலம் வந்த வேறு சில புகைப்படங்களில் அவர் மேலும் ஆபாசமாக நடந்து கொண்டதும் தெரிய வருகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
சினிமாவில் இருந்து நீக்க கோரிக்கை
அந்த பதிவுகளில் விநாயகன் மது போதையில் இருந்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக மலையாள சினிமாவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமாவிலிருந்தே முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விநாயகன் மன்னிப்பு
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, தன மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நடந்த சம்பவத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது பேஸ்புக் பதிவினை மலையாளத்தில் எழுதி இருந்தார். அந்த பதிவில் "ஒரு நடிகராக, ஒரு மனிதராக பல விஷயங்களை என்னால் கையாள முடியவில்லை.
இதனால் யாருக்காவது சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். இது குறித்து விவாதங்கள் தொடர வேண்டாம்" என்று விநாயகன் குறிப்பிட்டதாக மாத்ருபூமி பத்திரிகை தெரிவித்துள்ளது.
விநாயகனின் சர்ச்சைகள்
நடிகர் விநாயகனுக்கு சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. இவர் 2023 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதற்காக முன்னதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
கடந்த ஆண்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் காவலில் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு தேநீர் கடை உரிமையாளருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்