வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?

வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?

Malavica Natarajan HT Tamil
Published Nov 23, 2024 04:51 PM IST

பிரபல கானா பாடகியான இசைவாணி, சபரிமலைக்கு பெண்கள் வருவது குறித்து பாடல் ஒன்றை பாடி பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?
வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?

இவர்கள் இந்த நடைமுறையை மிகவும் புனிதமானதாகக் கருதி கட்டுப்பாடுகளுடன் விரதம் மேற்கொள்வர். ஆனால், பல காலங்களாக கன்னி சாமி என அழைக்கப்படும் ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

பெண்களுக்கு அனுமதி

முன்னதாக பூப்படையாத சிறுமிகளும், 50 வயதைக் கடந்த பெண்களும் ஐயப்பனுக்கு விரதமிருந்து அவரை தரிசிக்க வரலாம் என கூறப்பட்டது. பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல போராட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து தரப்பினரும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர்.

ஐயப்ப பக்தர்களை டார்கெட் செய்த இசைவாணி

இந்த நிலையில் தான், சென்னையை சேர்ந்த பிரபல கானா பாடகியான இசைவாணி ஐயப்பன் பாடலைப் பாடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பல மேடைகளில் பாடிய பெண் கானா பாடகி என்ற அடையாளமும், பிக்பாஸ் நிகழ்ச்சி அளித்த அடையாளமும் அவரது வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த சமயத்தில். அவர் கோவையில் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஐயப்பனை தரிசிக்க பெண்கள் வந்தால் தப்பா என கேட்கும் விதமாக, "ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா" என்ற பாடலைப் பாடியுள்ளார்.

வழக்கு

இது அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வைரலான நிலையில், கோவை மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் பாடலைப் பாடிய இசைவாணி மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பா.ரஞ்சித் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் வழங்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.

வைரலான பழைய வீடியோ

இதுகுறித்த விசாரணையில், இசைவாணி இந்தப் பாடலை 2019ம் ஆண்டு பாடியுள்ளதாகவும், சிலர் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மலைக்கு செல்லும் இந்த சமயத்தில் சர்ச்சையான இந்தப் பாடலை இப்போது இணையத்தில் வைரலாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடும் நடவடிக்கை 

அதுமட்டுமின்றி, இசைவாணி மீது கொடுக்கப்பட்ட புகாரில், இந்துக்கள் முக்கிய தெய்வமாக வணங்கும் ஐயப்ப சுவாமி மீதும், அவருக்காக பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.