Adhisaya Manithan: திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adhisaya Manithan: திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்

Adhisaya Manithan: திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 06, 2024 05:50 AM IST

Adhisaya Manithan: நாளைய மனிதன், அதிசய மனிதன் என இரண்டு பாகங்களும் ரசிகர்கள் நடுங்க வைத்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. மூன்றாம் பாகத்துக்கான விதை போட்டபோதிலும் இன்று வரையிலும் ஏனோ இந்த திகில் படம் உருவாக்கப்படவில்லை.

திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்
திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்

முதல் பாகத்தில் இறுதிக்காட்சியில் உயிர் பிழைத்து கொலைகாரனாக மாறிய மனிதனை கிணற்றுக்குள் வீசிய பின்னரும், கிணற்றில் இருந்து அவரது கை வெளியேறுவது போல் காட்டி, இந்த மனிதன் உயிருடன்தான் இருக்கிறான் என்பதுபோல் முடித்திருப்பார்கள். இதையடுத்து இரண்டாம் பாகமான அதிசய மனிதன் படத்தில் கிணற்றில் இருந்து வெளியேறும் அந்த மனிதன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க முடியுடன் பார்ப்பதற்கே கோரமாக காட்சியளிக்கிறார். 

தனது கொலை வெறி அடங்காத அவன் அருகில் இருக்கும் மேன்ஷனில் தங்கியிருக்கும் இளம் ஜோடிகள் ஒவ்வொருத்தராக கொல்கிறார். இறுதியில் அந்த மனிதன் ஊசி செலுத்தப்பட்ட கதிரியக்க தோட்டாக்களால் கொல்லப்படுகிறார். அப்போதும் எலும்புகூடாக அவன் உயிர் எழுவது போல் காட்டி தொடரும் இரண்டாம் பாகத்தை என முடித்திருப்பார்கள்.

நாளைய மனிதன், அதிசய மனிதன் என இரண்டு பாகங்களும் ரசிகர்கள் நடுங்க வைத்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. மூன்றாம் பாகத்துக்கான விதை போட்டபோதிலும் இன்று வரையிலும் ஏனோ இந்த படம் உருவாக்கப்படவில்லை.

திகில் படமாக இருந்தாலும் ரொமான்ஸ், காமெடி என பார்வையாளர்களை கவரும் அம்சங்களை படத்தில் தேவைப்படும் இடங்களில் வைத்திருப்பார்கள். திகில் படங்கள் என்றாலே ஆ... ஊ...என்ற சத்தமும், அச்சமூட்டும் நீண்ட, பலமான சிரிப்பு சத்தமும் குறிப்பாக பேயாக காட்டப்படும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை பெண்ணாக இருப்பது என தமிழ் சினிமாவில் அதற்கு முன் இருந்த அத்தனை கிளேஸேக்களையும் உடைத்தெறிந்த படமாக இது இருந்தது.

இதேகாலகட்டத்தில் ஹாலிவுட் திகில் திரைப்படமான Evil Dead வெளியாகி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை மிரட்டியது. அதில் கைவிடப்பட்ட காட்டு பங்களா ஒன்றில் பேய் இருப்பது தெரியாமல் ஜோடியாக செல்லும் நண்பர்கள், பேய்க்கு இறையாவார்கள். அதே பாணியில் இந்த படத்திலும் குழுவாக சென்று இறப்பே இல்லாத மனிதன் பிடியில் சிக்கி தங்களது உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

திகில் படங்கள் என்றாலே பழிக்கு பழி, செய்வினை போன்ற வழக்கமான பாணியில் இருந்து வந்த தமிழ் சினிமாவில் இருந்து விலகி அறிவியல் விளைவால் எதிர்காலத்தில் நிகழும் மாற்றங்கள் என புதுமையான கதைகளத்தில் பார்வயாளர்களை முழுக்க திகிலூட்டிய படமாக அதிசய மனிதன் அமைந்திருக்கும்.

பிரேமி- ஸ்ரீனி இசையமைப்பில் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பிடித்திருந்தாலும், அதை கதையோட்டத்துடனே படமாக்கியிருப்பார்கள். திகில் படத்துக்கு உண்டான பயம் என்ற அம்சத்தை முதல் ப்ரேம் முதல் கடைசி ப்ரேம் வரை ரசிகர்கள் மனதில் இருந்து அகலாத வகையில் உருவாக்கப்பட்ட அதிசய மனிதன் படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9