MGR: சரோஜா தேவியிடம் பேசாமலேயே நடித்த எம்ஜிஆர்.. கருத்து மோதலில் உருவான படம் !
50 years of Petralthan Pillaiya: எம்ஜிஆர் நடித்து வெளியான பெற்றால் தான் பிள்ளையா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகின்றன.

மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து தமிழ் மக்களின் தெய்வமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். அதனை வைத்து தமிழ்நாட்டை ஆளும் பதவியை மக்கள் அனைவரும் அவர் கையில் கொடுத்தனர். அரசியல் மற்றும் சினிமா இந்த இரண்டிலும் தலைசிறந்த மன்னராக விளங்கினார் எம்ஜிஆர்.
திரைப்படங்கள் தான் இவருடைய ஆணி வேர். இவருடைய திரை பயணங்களில் மிகவும் முக்கிய திரைப்படமாக அமைந்தது பெற்றால் தான் பிள்ளையா. ஒரு சில படங்கள் வெற்றி பெறாமல் போனாலும் இவர் நடித்த 90% திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த பெற்றால் தான் பிள்ளையா.
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஆறுதாஸ் திரைக்கதையில் உருவானது இந்த திரைப்படம். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் இதற்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
