Manimegalai: குக்கு வித் கோமாளியில் இருந்து விலகியாச்சி..அடுத்து இந்த சேனலுக்கு போகிறாரா? மணிமேகலை அடுத்த அதிரடி முடிவு!
Manimegalai : இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 4 சீசன் வரை செஃப் வெங்கடேஷ்பட்- தாமு கூட்டணியில் மக்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி வந்தநிலையில், அந்தக் கூட்டணி முறிந்து வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தார். இவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்பாளர்களுடனும் சகஜமாக பழகவே நேரம் எடுத்த காரணத்தால் இந்த சீசன் ஆரம்பம் முதலே சற்று தொய்வாக காணப்பட்டது.
இதற்கிடையில், தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்தும் பதிவிட்டும் வருகின்றனர்.
சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை
மணிமேகலை தனது இன்ஸ்டா பதிவில், “மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.