Dr Diwakar on Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dr Diwakar On Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்

Dr Diwakar on Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2025 09:09 PM IST

Dr Diwakar on Mysskin: உங்களுக்கு 50 வயது மேல் ஆகிவிட்டது நீங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதை விடுத்து நீங்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவுரை வாங்கும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. - மிஷ்கினுக்கு திவாஹர் பதிலடி

Dr Diwakar on Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்
Dr Diwakar on Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்

அட்வைஸ் செய்ய வேண்டுமே

இது குறித்து அவர் கொடுத்திருக்கும் பதிலடியில், ‘மிஷ்கின் சார் நீங்கள் நிறைய சமுதாய சீர்திருத்த திரைப்படங்களை எடுக்க வேண்டும். நீங்கள் தான் எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டுமே தவிர, நாங்கள் உங்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடாது.

உங்களுக்கு 50 வயது மேல் ஆகிவிட்டது நீங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதை விடுத்து நீங்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவுரை வாங்கும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் அப்படி அநாகரிகமாக பேசி இருக்கக் கூடாது; அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சிறுவனை குறிப்பிட்டு நடித்துக் காண்பித்தார்.

மிகவும் அநாகரிகமானது.

அதை முன் இருந்த கூட்டம் ரசித்தது. இதற்கிடையே அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்த சிலர், அதற்கு கீழே என்னுடைய போட்டோவை இணைத்தார்கள். ஆனால் உண்மையில் மிஷ்கின் என்னைப் பற்றி அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதையுமே பேசவில்லை. இருப்பினும் அவர் பேசியது மிகவும் அநாகரிகமானது.

இதற்காக அவர் பொதுமக்கள் முன்னிலையில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். ஒரு இளைய தலைமுறையை நீங்கள் இப்படி பேசி இருக்கக் கூடாது. நடிக்கத் தெரியாதவர்களை நடிக்க வைப்பவர்தான் இயக்குநர் அவர்களைப் பார்த்தால் நீங்கள் மூக்கில் குத்துவீர்கள் என்று கூறியிருக்கிறீர்கள். இதெல்லாம் ஒரு பேச்சா, நீங்கள் படித்தவர் தானே, நாகரீகம் என்பது உங்களுக்கு கிடையாதா?

விலைக்கு வாங்கி விட்டதாக…

உங்கள் குடும்ப உறுப்பினர்களை யாராவது திட்டியிருந்தால் அவர்களை நீங்கள் திட்டுவதற்கு இது போன்ற கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினால் கூட மக்களுக்கு இது பெரிதாக தெரியாது. ஆனால், நீங்கள் இயக்குநர் என்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நீங்கள் விலைக்கு வாங்கி விட்டதாக நினைக்காதீர்கள்; எங்கள் பின்னாடி, என் பின்னாடி இந்தியாவை ஏன் உலகமே இருக்கிறது.’ என்று பேசினார்.

அவர் பேசும் போது, இந்த மேடையில், ‘அமீரையும், வெற்றிமாறனையும் தவிர இங்கிருக்கும் அனைவருமே குடிகாரர்கள். தமிழ் சினிமாவில் அதிகமாக குடித்தவனும் குடித்துக்கொண்டிருப்பவனும், குடித்துக் கொண்டிருக்கப்போபவனும் நானே... தமிழ்நாட்டில் ஆதியில் இருந்து குடியானது இருக்கிறது. எனக்கு அதைப் பற்றிய முழு விவரமும் நன்றாகவே தெரியும்.

சாராயமே காய்ச்சும் அளவுக்கு எனக்கு டெக்னாலஜி தெரியும். இந்த சமூகம் காரி துப்பிய எச்சிலை போலத்தான் அந்த குடியை பார்க்கிறது. கிட்டத்தட்ட நம்மிடம் ஆறு வகையான பழங்குடிகள் இருக்கிறார்கள்; அவர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில், மதுவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அந்த மதுவை அவர்கள் அவர்களின் கடவுள் வழிபாட்டின் போது குடிப்பார்கள்.

ஆறு வகை பழங்குடிகள்

அந்த நிகழ்வு வருடத்திற்கு 4 நாட்கள் வரும். அப்போது அவர்கள் தங்களுடைய கடவுளுக்கு மதுவையும் மாமிசத்தையும் படைத்து, அதை சாப்பிட்டு, அன்று இரவு முழுவதும் ஆடிக்களைத்து மறுநாள் மறுபடியும் வேட்டைக்கு திரும்புவார்கள். ரோமானியர்கள் குடியிலேயே வாழ்ந்தார்கள். பிரிட்டனில் எல்லா வீட்டிலும் ஒயின் இருக்கிறது. ஸ்காட்லாண்டில் விஸ்கி பிரபலமாக இருக்கிறது.

நாளும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன்தான். ஆனால், ஒரு நாள் கூட அந்த மது என்னை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கிடையாது. நான் துணை இயக்குனராக இருக்கும் பொழுது, குடிக்க செல்வோம்; அப்பொழுது ஒரு குவாட்டர் வாங்கதான் காசு இருக்கும். அதை வாங்கும் நான், கூடவே இரண்டு கொசுவத்திகளையும் எடுத்துச் செல்வேன்.

சினிமா பேசுவோம்

காரணம், நாங்கள் குடித்துக்கொண்டே சினிமா பேச ஆரம்பித்து விடுவோம். அப்படி பேச ஆரம்பித்து விட்டால், அந்த பேச்சானது சென்று கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் நான் பாட ஆரம்பிப்பேன் எனக்கு எங்கிருந்தாவது ஒரு குவாட்டர் வந்துவிடும்.

குடிக்கு அடிமையானவர்கள் பெரும்பான்மையானோர் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். இன்று எது தான் நம்மை அடிமையாக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் என் மகள் போல இருக்கும் பெண்கள், அநாகரிகமான பாடலுக்கு, உதட்டை கடித்து நடனமாடுகிறார்கள். இதைவிட ஒரு அடிமைத்தனம் இருக்க முடியுமா என்ன? இன்னும் கொஞ்ச நாட்களில் ஐபிஎல் வந்துவிடும்; நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம். தோனி கடைசி வரை ஓய்வு எடுக்கப் போவதே இல்லை; சச்சின் டெண்டுல்கர் தொப்பையோடு வந்து ஆட தான் போகிறார்

மிகப்பெரிய குடிகாரன்

நான் மிகப்பெரிய குடிகாரன்தான். ஆனால் எனக்கு அதைவிட மிகப்பெரிய போதை சினிமா. இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கிறான் குடித்துவிட்டு, அவரது பாடலை தான் சைடிஷ் போல எடுத்துக்கொள்வேன்.மனிதர்களை அதிகமாக குடிகாரர்களாக மாற்றியதும் இளையராஜாதான். குடிப்பதை வைத்து மனிதர்களை எடை போடுவதை தவிர்க்க வேண்டும். இந்தப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, குடிப்பவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும்’ என்றார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.