பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! - எதற்காக? ஏன்? - அதிகாரிகள் கொடுத்த விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! - எதற்காக? ஏன்? - அதிகாரிகள் கொடுத்த விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! - எதற்காக? ஏன்? - அதிகாரிகள் கொடுத்த விளக்கம்

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 03:56 PM IST

போர் விமானங்கள், யுசிஏவி மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் இராணுவ உள்கட்டமைப்பு, பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது அண்டை நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இது நடந்தது.

பாகிஸ்தானில் உள்ள 8 ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! - எதற்காக? ஏன்? - பிரித்து மேய்ந்த அதிகாரிகள்!
பாகிஸ்தானில் உள்ள 8 ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! - எதற்காக? ஏன்? - பிரித்து மேய்ந்த அதிகாரிகள்!

இது குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கம் பின்வருமாறு:-

விக்ரம் மிஸ்ரி விளக்கம்

"சனிக்கிழமை அதிகாலை இந்திய ராணுவம் சார்பில் தொடுக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்று கூறினார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

கர்னல் சோபியா குரேஷி பேசும் போது, ‘பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து இருக்கிறது; ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

இந்தியா தாக்கிய இலக்குகளில், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுத சேமிப்பு பகுதிகள் ஆகியவை அடங்கும்’ என்று கூறினார்.

மேற்கு எல்லை முழுவதும்

மேலும் அவர் பேசும் பொது, ‘பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைக்கும் பாகிஸ்தானின் தாக்குதல் பாணி சனிக்கிழமை அதிகாலையிலும் தொடர்ந்தது. மேற்கு எல்லை முழுவதும் அது நடந்தன. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைக்க யுசிஏவிகள், ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.

ட்ரோன்களைப் பயன்படுத்தி வான்வழி ஊடுருவலை நாடியதோடு, கட்டுப்பாட்டு எல்லையில் கனரக ஆயுதங்களையும் வீசியது.’ என்று பேசினார்.

சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், பாகிஸ்தான் படைகள் அமிர்தசரஸை நோக்கி சர்வதேச எல்லை (ஐபி) வழியாக பல பைக்கர் யிஹா III காமிகேஸ் ட்ரோன்களை ஏவி விட்டன. இது மக்களை தாக்குவதற்கு அரங்கேற்றப்பட்ட தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஓ.சி) ட்ரோன்களைப் பயன்படுத்தி பல விமான ஊடுருவல்களை நடத்த முயன்றது. பொதுமக்கள், உள்கட்டமைப்புகளை நோக்கி பீரங்கி தாக்குதல்களை நிகழ்த்தியது. இதில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இது குறித்து கர்னல் குரேஷி கூறும் போது, ‘குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி மற்றும் அக்னூர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தின. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

மேலும், ‘அதிகாலை 1.40 மணிக்குப் பிறகு பஞ்சாபில் உள்ள விமான தளங்களை பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகளால் குறிவைத்தன. ஜம்மு-காஷ்மீரில் (ஜே &கே) உள்ள மூன்று விமான தளங்களில் உள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பள்ளிகளும் தாக்கப்பட்டன’ என்றும் கூறினார்.

விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறும் போது, ‘ஸ்ரீநகரில் இருந்து குஜராத்தின் நலியா வரை 26க்கும் மேற்பட்ட இடங்களில் விமான ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஆயுதப் படைகள் இந்த அச்சுறுத்தல்களையும் பெரும்பான்மையான தாக்குதல்களையும், வெற்றிகரமாக சமாளித்தன. இருப்பினும், உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர் மற்றும் புஜ் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை நிலையங்களில் உபகரணங்கள் மற்றும் பணியாளர்களுக்கு சேதம் ஏற்பட்டது’ என்று பேசினார்.

குரேஷி கூறுகையில், பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை 300 முதல் 400 துருக்கி நாட்டிற்கு சொந்தமான ஆயுதமேந்திய ட்ரோன்களுடன் இந்தியாவிற்குள் 36 இடங்களை குறிவைத்தது; மேலும் இராணுவ தளங்களைத் தாக்க, பொதுமக்கள் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தியது’ என்றார்.

தயார் நிலையில் உள்ளன

மேலும் அவர், ‘ இந்திய ஆயுதப்படைகள் "செயல்பாட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட முறியடிக்கப்பட்டு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் சேதமே உருவாகி இருக்கிறது.