14 years of Paiya : பயணத்தை அற்புதமாக காட்டிய படம்.. பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.. 14 ஆம் ஆண்டில் பையா!
14 years of paiya : எதிர்பாராத ஆச்சர்யங்களையும் புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை நேசிக்கும் நபர்கள் ஏராளம். இப்படி ஒரு பயணத்தை மையமாக கொண்டு வெளிவந்த படம் தான் பையா.

2010ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பையா. மேலும் இப்படத்தில் மிலிந்த் சோமன், சோனியா தீப்தி மற்றும் ஜெகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து அனைத்து பாடல்களையும் ஹிட் செய்து இருப்பார்.
இதுவரை நடித்திராத கெட்டப், ஸ்டைலிஷ் கேரக்டர் என புது விதமாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் கார்த்திக்.இப்படத்தில் இருந்து பையா கார்த்தி என அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு இப்படம் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தது.
பயணம் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். யாருக்குத்தான் பயணம் என்றால் பிடிக்காது. அதுவும் நமக்கு பிடித்த நபருடன் பயணம் அமையும் போது சொல்ல வார்த்தை இல்லை. அந்த அளவிற்கு வாழ்வில் மறக்க முடியாத பயணமாக அமைந்துவிடும். எதிர்பாராத ஆச்சர்யங்களையும் புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை நேசிக்கும் நபர்கள் ஏராளம். இப்படி ஒரு பயணத்தை மையமாக கொண்டு வெளிவந்த படம் தான் பையா.
தான் நேசிக்கும் பெண்ணுடன் திடீர் பயணம் அமைகிறது. இந்த பயணத்தில் கார்த்திக் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார், அதனை எப்படி சரி செய்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் காரில் தமன்னா கார்த்திக் பெங்களூரில் இருந்து மும்பை செல்கிறார்.இந்த நீண்ட பயணத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள், கார்த்திக் செய்யும் நக்கல், தமன்னாவின் க்யூட் ரியாக்சன் என நம்மை அப்படியே டிராவல் செய்ய வைக்கும் இப்படம்.
இப்படத்திலும் காதல் என்பது எப்படி மலர்ந்தது என்றால் பார்த்த உடனே தான். புதுசா எதுவும் இல்லை. அப்படி தான் பெங்களூரில் தமன்னாவை பார்த்த முதலே கார்த்தி காதல் வயப்படுகிறார். எந்த அளவுக்கு என்றால் தமன்னாவை பார்த்து தான் போகும் இண்டெர்வியூவை மிஸ் பண்ணிவிடுவார்.
தமன்னா வீட்டில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள்.எவ்வளவு சொல்லியும் வீட்டில் கேட்காததால் மும்பையில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார். அப்போது தான் கார்த்தி அறிமுகமாகிறார். தனது நண்பனை அழைத்துவர சென்ற கார்த்தியை டாக்சி டிரைவர் என எண்ணிய தமன்னா அவரிடம் மும்பை செல்ல உதவி கேட்கிறார். இதுதான் நல்ல வாய்ப்பு என கார்த்தி கருதி டாக்சி டிரைவராக நடித்து தமன்னாவை அழைத்து செல்கிறார்.
இந்த பயணத்தில் வில்லன்களை சமாளித்து எப்படி தமன்னாவை பாட்டி வீட்டில் சேர்க்கிறார். பின்னர் எப்படி காதல் கைக்கூடும் என்பது தான் கதை. குறிப்பாக தமன்னாவை பாட்டி வீட்டில் விட்டு அந்த பிரிவை தாங்க முடியாமல் சோகத்துடன் தன் தோழிக்கு போனில் அழைத்து பேசும் காட்சி டச் சீன் என சொல்லலாம். யுவனின் இசை நம்மை உருக வைத்திருக்கும்.
அதே போல பயணம் என்றாலே ”பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்”இப்பாடல் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இந்த பாடல் ஹிட். இப்பாடலில் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கும்.அதேபோல பயணத்தில் ஒரு பகுதியாக கார் கோளாறு பண்ண அதை சரிசெய்ய ஒரு இடத்தில் இருவரும் காத்திருக்க இரவு நேரம் மின்மினிபூச்சிகள் வட்டமிட அந்த சமயத்தில் மேஜிக் செய்யும் பாடலாக ஒலிக்கும்” சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி” என்ற பாடல். நம்மையும் இயற்கை அழகை ரசிக்க வைக்கும் இப்பாடல்.
அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களான,
”ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்” என்ற பாடல் தமன்னாவை மும்பையில் விட்டு செல்லும் போது கார்த்தி பிரிவை தாங்க முடியாமல் மன வேதனையில் இருக்கும் போது இப்பாடல் ஒலிக்கும்.
முக்கியமாக படத்தில் அறிமுக பாடல் இன்றும் பலரின் காலர் டுயூன் ஆக இருக்கும். அதுதான்,
“துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்”
அதேபோல“என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி” என்ற பாடல் காதலை வெளிப்படுத்தாமல் இருக்கும் கார்த்திக்கு யுவன் இப்பாடலை கொடுத்து அசத்தி இருப்பார், அதுதான்
குறிப்பாக படத்தில் க்ளைமேக்சில் காதலை சொல்லாமல் தவித்த படி சோகமாக பெங்களூர் திரும்பும் கார்த்திக்கு மீண்டும் தமன்னாவை பெங்களூருக்கு அழைத்து செல்ல வாய்ப்பு கிடைக்க செம மகிழ்ச்சியில் இருக்கும் போது கார்த்தியின் நண்பர்கள் பெங்களூர் திரும்பும் வழியில் காரை நிறுத்துகிறார்கள். கார்த்திக் ஷாக் ரியாக்ஷன் கொடுப்பார். பின்னர் கார்த்தியில் நண்பர்கள் தமன்னாவிடம் கார்த்தியின் காதல் குறித்து கூறுகிறார்கள். பின்னர் இருவரும் இணைகிறார்கள்.இப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் ஆகிறது.

டாபிக்ஸ்