ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு

ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 03:25 PM IST

மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் துணிச்சல், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.. -இளையராஜா பதிவு!

ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு
ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு

இசை கச்சேரி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளம்

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், ‘""VALIANT" - இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து, அதற்கு "Valiant" என்று பெயரிட்டேன்; அப்போது, பஹல்காமில் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் துணிச்சல், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.. நமது தன்னலமற்ற துணிச்சல் மிக்க வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்..

ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா! ஜய பேரிகை கொட்டடா! - பாரதி

ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும், மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் "வீரம்" முயற்சிகளுக்காக, எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கைகளை முடுக்கி விட்ட இந்திய அரசு, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு பதிலடி

இந்த நிலையில் பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. அதற்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் நிலவும் போர் பதற்றம் குறித்து டில்லியில் பிரதமர் மோடியுடன் , தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அதில், அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் குறித்தும், அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு அஜித் தோவல் விளக்கி இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.