பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா
பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜாவின் செய்தியைப் பற்றிப் பார்க்கலாம்.

சிம்பொனி நிறைவு செய்ததை இளையராஜா மலையாளத்தில் பேசி அறிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இளையராஜா. அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 'அன்னக்கிளி' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப்பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர். இவரது 1000-ஆவது படமாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ’தாரை தப்பட்டை’ இருந்தது.
இந்தாண்டின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக, ஜன.25 மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். இரைப்பை புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியிருந்தார்.