Ilaiyaraaja: “எனது வேதனை தான் உங்களை ஆறுதல்படுத்தும் இசை..” பவதாரணி நினைவு நாள் இசை நிகழ்ச்சி - இளையராஜா உருக்கம்
Ilaiyaraaja on Bhavatharini: மறைந்த மகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இன்ஸ்டாவில் பேசியிருக்கும் இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகி, இசையமைப்பாளருமான பவதாரணி, உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார். இதையடுத்து பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது தந்தையும், இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா எமோஷனலாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது இன்ஸ்டாவில் மகள் பவதாரணியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் தனது குரலில் பேசியிருப்பதாவது, "என் அருமை மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள். அன்பே உருவான அந்த மகள் பிரிந்த பின்பு தான், அந்த குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என்னுடைய கவனம் இசையிலேயே இருந்ததால், எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்கள் எல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.