Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!

Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2025 09:34 AM IST

Ilaiyaraaja: எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கு திமிர் வரும். எனக்குத்தான் கர்வம் என்பது வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக வர வேண்டும். காரணம் உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். - இளையராஜா!

Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!
Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!

அதுதான் நிஜம்

இது குறித்து அவர் பேசும் போது, ‘என்னுடைய இசையின் பிரமாண்டத்தை பார்த்து, இவர் ஒரு மனிதராக இதை செய்திருக்க வாய்ப்பில்லை; நிச்சயமாக இவருக்குள் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று உணருகிறீர்கள். அப்படி என்றால், அதுதான் நிஜம். அது என்னுடைய முயற்சியில் வருவதல்ல.

நான் இந்த ட்யூனில் உங்களை கட்டிப்போட வேண்டும் என்று நினைத்து, அந்த டியூனை நான் கம்போஸ் செய்யவில்லை. ஹார்மோனியம் பெட்டி முன்னால் உட்காருகிறேன்; மனதில் தோன்றுவதை இசையாக கொடுக்கிறேன். சிசுவில் உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தைக்கு என்னுடைய இசை உயிர் கொடுத்திருக்கிறது.

குழந்தைக்கு ஏற்பட்ட அசைவு

ஆம், ஒரு தாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு அசைவே இல்லாமல் இருந்தது; இதையடுத்து அதை ஆபரேஷன் செய்து எடுக்க டாக்டர்கள் தயாரானார்கள். அப்போது அந்த தாய் எனக்கு திருவாசகம் இசை கேட்க வேண்டும் என்று சொல்ல, இசை ஒலிக்கப்பட்டது அதை கேட்டு அவர் வயிற்றில் இருந்த குழந்தைக்கு அசைவு உருவானது.

மலையாளத்தில் நான் இசையமைத்த ஒரு தாலாட்டு பாடலை வைத்து, மதம் பிடிக்கும் கட்டத்திற்கு சென்ற யானையை, அந்த யானைப்பாகன் கட்டுக்குள் கொண்டு வந்து தூங்க வைத்தான்.

இன்னொரு இடத்தில், யானைக்கூட்டம் ஒன்று நெற்பயிரை நாசம் செய்ய வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த டூரிங் தியேட்டரில் ‘ராசாத்தி உன்ன’ பாடல் ஒழிக்கப்பட்டது. அந்த பாடலைக் கேட்டு அந்த யானைகள் அங்கு வந்து எந்த பயிரையும் சேதம் செய்யாமல் சென்றது. இது போன்ற சம்பவங்களெல்லாம் அப்பாற்பட்ட சக்தியால் தான் நிச்சயம் நடக்கும். இதையெல்லாம் நான் சொன்னால் எனக்கு தலைக்கனம் இருக்கிறது. திமிர் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள்.

வேறு யாருக்கு திமிர் வரும்.

எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கு திமிர் வரும். எனக்குத்தான் கர்வம் என்பது வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக வர வேண்டும். காரணம் உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. உலகத்தில் யாரும் செய்ய முடியாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திமிர் இல்லாமல் எப்படி இருக்கும். இதையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு திமிர் வருமா வராதா? ஆனால் எனக்குத் திமிர் இல்லை.

உனக்கு எவ்வளவு திமிர்?

ஆனால், எனக்குத் திமிர் இருக்கிறது என்று ஒருவன் சொல்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பாருங்கள். நான் என்னுடைய வேலையை ஒழுங்காக செய்துவ சென்று கொண்டிருக்கிறேன். கர்வம் என்பது எப்போது வரும்; ஒரு வேலையை நன்றாக செய்தால் கர்வம் வரும். என்னை குற்றம் சாட்டுபவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, என்னை கர்வம் பிடித்தவர் என்று சொன்னால், நிச்சயம் எனக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும். விஷயம் இருக்கிறவனிடம் கர்வம் இருக்காதா? என்ன சொல்லுங்கள்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.