"நான் மனசு வச்சிருந்தா விக்கியும் நயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கூட இருக்க மாட்டாங்க"- மிர்ச்சி சிவா
நான் மனது வைத்திருந்தால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கவே மாட்டார்கள் எனக் கூறி நடிகர் மிர்ச்சி சிவா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

"நான் மனசு வச்சிருந்தா விக்கியும் நயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கூட இருக்க மாட்டாங்க"- மிர்ச்சி சிவா
விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உ்ள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார்.
இப்படத்திற்கு எட்வின் லூயிஸ், விஸ்வநாத் ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். சி.வி.குமார் படத்தை தயாரித்துள்ளார்.
சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகமான சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் திரைப்படம், தற்போது டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
