Actor Soori: ‘நான் உண்மையில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.. இதுதான் என் பெரிய பலம்..’
Actor Soori: இயக்குநர் வெற்றிமாறனுக்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என நடிகர் சூரி கூறியுள்ளார்.

Actor Soori: தமிழ் சினிமாவில், சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து பின் காமெடியனாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் சூரி. இவர் காமெடியில் தனக்கென தனி பாணியை கண்டுபிடித்ததன் மூலம் மக்கள் விரும்பும் காமெடியனாகவும் இயக்குநர் விரும்பும் நடிகராகவும் மாறினார். இதையடுத்து அவர் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச காமெடி நடிகரானார்.
தன்னடக்கம்
இவர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் இயக்குநர் வெற்றிமாறன், அவரை தன் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக கூறி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்படி ஒரு வாய்ப்பை சூரியும் எதிர்பார்த்தது இல்லை. மக்களும் எதிர்பார்க்கவில்லை. இதை பலரும் விமர்சிக்க செய்த நிலையில், தன்னை கதாநாயகன் என சொல்லாமல் கதையின் நாயகன் என சொல்லி தன்னடக்கம் கொண்டார் சூரி.
உடலை வருத்தி மெருகேறிய சூரி
இதையடுத்து, வெற்றிமாறன் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து, தன்னை உடலளவிலும் மெருகேற்றிக் கொண்டார்.
இந்த சமயத்தில் தான் தன் கதையின் நாயகன் 6 பேக்ஸ் வைத்துக் கொண்ட சமயத்தில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் வெற்றிமாறன் வெளியிட்டு விமர்சித்தவர்கள் வாயை மூட வைத்தார்.
எதார்த்த நாயகன்
மேலும், வெற்றிமாறனின் விடுதலை படம் வெளிவந்த சமயத்தில், விமர்சனம் செய்த வாயெல்லாம் பாராட்டுகளை தெரிவித்தது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு ஒரு எதார்த்த நாயகனை கொண்டு வந்ததாக கூறியது. அதற்கு ஏற்றார் போல தன் நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்தார் சூரி.
காவலராகவும், காதலராகவும் தன் ஏக்கங்களை அழகுற வெளிப்படுத்தி இருப்பார். அவர் அவமானங்களை தாங்கிக் கொள்ளும் போதும், கோவத்தை கட்டுப்படுத்தும் காட்சிகளும் மக்களுடன் மக்களாக இணையும் காட்சிகளும் பலரையும் ரசிக்க வைத்தது.
குவியும் விருதுகள்
இதனால், நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து கொட்டுக்காளி போன்ற படங்களும் வெளியாகி விருதுகளை வாங்கிக் குவித்தன. இதன் மூலம் அவர் உலகம் அறியும் நடிகராகவும் மாறினார்.
இவற்றை எல்லாம் மிகவும் பக்குவமாக கையாண்ட சூரி, தன்னை சினிமா வாழ்க்கையில் முன்னேற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
நன்றி உள்ளவனாக இருப்பேன்
அந்தப் பதிவில், "#Viduthalai1 #Viduthalai2 திரைப்படம் என் வாழ்க்கையில் எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கும். குமரேசன் வேடத்தில் நடித்தது என் வாழ்வில் ஒரு சிறந்த மற்றும் உறுதியான பாத்திரமாக இருக்கும். நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாகவும், வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சியை பெற்றவனாகவும் இருக்கிறேன்.
தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர்
இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் சார், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குனர்களுக்கும் ஒரு சிறப்பு குறிப்பு. உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த மைல்கல்லை என்னால் எட்டியிருக்க முடியாது.
உங்கள் உண்மையான அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. அனைத்து ஊடகங்களுக்கும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் என்றும் நன்றி. நீங்கள் தான் என் பெரிய பலம்!" எனக் கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்