HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. ‘எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்’ - விஷ்ணு மஞ்சு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Tamil Exclusive: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. ‘எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்’ - விஷ்ணு மஞ்சு பேட்டி!

HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. ‘எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்’ - விஷ்ணு மஞ்சு பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 28, 2025 03:41 PM IST

HT TAMIL EXCLUSIVE: எல்லாம் சிவனோட துணையாலதான் நடந்துச்சுன்னு நம்புறேன். நாங்க நினைச்சோம். அவர் நடத்தி வச்சாரு அவ்வளவுதான்! - விஷ்ணு மஞ்சு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. ‘எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்’ - விஷ்ணு மஞ்சு பேட்டி!
HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. ‘எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்’ - விஷ்ணு மஞ்சு பேட்டி!

காரணம், ஹிந்திக்கு அக்‌ஷய்குமார், மலையாளத்திற்கு மோகன்லால், தமிழுக்கு சரத்குமார், தெலுங்கிற்கு பிரபாஸ் என ஒட்டுமொத்த முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே டீசரில் களமிறக்கி இருந்தார்கள்.

ஏப்ரல் 25 ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்து விஷ்ணுவிடம் பேசுவதற்கான வாய்ப்பு ரெட் லாரி திரைப்பட விழாவில் கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து..

பாகுபலி படம் மாதிரி கூஸ் பம்ப்ஸ் ஃபார்மெட்டில்தான் கண்ணப்பா இருக்கா?

ஒரு கதையில என்ன ஹை இருக்குன்னு நம்மால சொல்லவே முடியாது. கண்ணப்பா படத்துல இடைவேளைக்கு 25 நிமிஷத்துக்கு முன்னால, ஒரு எபிசோடு ஆரம்பிக்கும். அங்க உங்களுக்கு கிடைக்கிற ஹை படம் முழுக்கவே கிடைக்கும். ஆக, படமே ஹைய்யாதான் இருக்கும்.

படத்துல பெரிய பெரிய ஸ்டார்கள் இருக்காங்களே? எப்படி சாத்தியமாச்சு?

எல்லாம் சிவனோட துணையாலதான் நடந்துச்சுன்னு நம்புறேன். நாங்க நினைச்சோம். அவர் நடத்தி வச்சாரு அவ்வளவுதான்!

கண்ணாப்பால புதுசா என்ன இருக்கு?

இதுக்கு முன்னாடி கண்ணப்பா கதை நிறைய முறை படமா எடுக்கப்பட்டு இருக்கு.. அந்தப்படத்த எடுத்தவங்க, அந்த சமயத்துல என்ன நடந்திருக்கும் அப்படிங்கிறத கற்பனையா எழுதி படமாக்குனாங்க.. ஆனா, கிளைமாக்ஸ ஒன்னுதான்.

முந்தைய படங்களுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்னா, ஒரு நடிகனா கண்ணப்பாவ மைண்ட்ல வச்சு நான் இந்தக் கதைய எழுதிருக்கேன். இது எனக்கு நான் எழுதிகிட்ட கதை. படத்துல கண்ணப்பாவாவே வாழ்ந்தேன். கண்ணப்பாவோட, என்னோட வெர்ஷன் எப்படி இருக்கு அப்படிங்கிறத நீங்கதான் பார்த்து சொல்லணும்.

நிறைய சவால்கள் இருந்திருக்குமே?

நான் திரும்பி பார்த்தா இப்ப, நான் சந்திச்ச எந்த சவால்களுமே சவால்களா தெரியல.. எல்லாமே அந்த கடவுள்தான் நடத்தி வச்சுருக்காருன்னு புரியுது.

பான் இந்தியா படம்.. பாக்ஸ் ஆஃபிஸ் ஃப்ரஷ்ஷர் இருக்குமே?

எனக்கும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் முக்கியம்தான். ஆனா, படம் அவ்வளவு கலெக்ட் பண்ணும்.. இவ்வளவு பண்ணும் அப்படின்னு என்னால சொல்ல முடியாது. படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா மக்கள் படத்துக்கு எவ்வளவு பாசம் காட்றாங்க.. எவ்வளவு சப்போர்ட் பண்றாங்க அப்படிங்கிறத பொறுத்துதான் கலெக்‌ஷன் இருக்கும். ஆனா, அது என் கையில இல்ல.’ என்று பேசி விடைபெற்றார்.

கண்ணப்பாவின் கதை!

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரத தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பரை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் இவருடன் மோகன்லால், காஜல் அகர்வால், அக்‌ஷய் குமார், பிரீத்தி முகுந்தன், பிரபாஸ், மோகன் பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.