பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?

பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?

Suguna Devi P HT Tamil
Published Apr 11, 2025 09:01 AM IST

டோலிவுட் நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கரின் உடல்நிலை குறித்து அவரது சகோதரர் சிரஞ்சீவி தகவல் தெரிவித்துள்ளார். மார்க் சங்கர் விரைவில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?
பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் மகன் மார்க் சங்கர் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவர் மேலும் குணமடைய வேண்டும். எங்கள் குலதெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் கருணையால், அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார். கடவுள் எங்களுக்கு ஆதரவாக நின்று அந்த சிறுவனை ஒரு பெரிய சோகத்திலிருந்து காப்பாற்றினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மார்க் சங்கர் குணமடைய பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி எங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக நின்றார்கள். எனது சகோதரர் பவன் கல்யாண் மற்றும் எங்கள் முழு குடும்பத்தின் சார்பாக, அனைவருக்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" எனக் பதிவிட்டு இருந்தார்.

மார்க் சங்கர் என்ன ஆனார்?

சிங்கப்பூரில் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் படித்து வந்த பள்ளியில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மார்க் சங்கருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது மட்டுமின்றி, நுரையீரலுக்குள் புகை வந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 14 குழந்தைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் காயமடைந்தனர்.

குழந்தைகளுக்கு சமையல் பாடங்கள் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பவன் கல்யாணின் மகன் ரிவர் வேலி பகுதியில் உள்ள தக்காளி கிச்சன் பள்ளியில் நடந்து வரும் ஈஸ்டர் முகாமில் பயிற்சி பெற்று வருகிறார். கிழக்கு சிங்கப்பூரில் ஜூ சாட் சாலையில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. மார்ச் 3 முதல் மே 15 வரை 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஈஸ்டர் சமையல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்கோ சங்கரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.