Suchitra issue: சுத்தி விட்ட சுசித்ரா.. ‘பட்டியலின சமூகத்த அப்படி ஆபாசமா’- கார்த்திக் மீது பாய்ந்த புகார்
Suchitra issue: சமூகவலைதளங்களில் சுசித்ரா என்ற நடிகையை ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால், திட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, இழிவாக பேசி இருக்கிறார். -கார்த்திக் மீது பாய்ந்த புகார்

Suchitra issue: பட்டியலின சமூகம் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமாரின் ஆடியோ ஒன்று வைரல் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.
சுசித்ரா விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் புகார்
அந்த புகாரில், “ நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறேன். இந்த புகார் என்னால் பொதுநலமான வழங்கப்படுகிறது. கடந்த 15/5/2024 அன்று கார்த்திக் குமார் என்ற நடிகர் சமூகவலைதளங்களில் சுசித்ரா என்ற நடிகையை ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால், திட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, இழிவாக பேசி இருக்கிறார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இவர்களின் தனிப்பட்ட ஆபாச பிரச்சினைகளுக்காக ஒரு சமூகத்தை இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, அமைதியாக அனைத்து சாதியினரும் ஒன்றாக சகோதரர்களாக, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதி கலவரத்தை தூண்டியதற்காகவும், ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதற்கும் இவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.