Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?
Divya Kallachi: சிறார்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக அளித்த புகராின் அடிப்படையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் பிண்ணனி என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

Divya Kallachi: கொரோனா காலத்தில் பூம் ஆன டிக்டாக், ரீல்ஸ் மூலம் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல பிரபலங்கள் கிடைத்தனர். சிலர் தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தினர். சிலரோ தங்களின் நடிப்புத் திறமையையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இன்னும் சிலர், மக்களை சிரிக்க வைக்க செய்வதாக நினைத்து பல கோமாளித்தனமான வேலைகளில் ஈடுபட்டனர்.
இப்படியானவர்கள், கொரோனா சமயத்தில் கிடைத்த ரீச் மூலம் தொடர்ந்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுக்கான நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கன்டென்ட் கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ரசிக்கக்கூடியவையாக தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல ஒருவித அலுப்பையும் அவர்களது வார்த்தைகள் வெறுப்பையும் தர ஆரம்பித்தது.
கார்த்தியால் கன்டென்ட் ஆன திவ்யா
இப்படி, மேலே கூறிய வகையில், தன்னை சோசியல் மீடியா முன்பு அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் திவ்யா கள்ளச்சி. தன்னை கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது தன்னை விட்டு சென்றதாகவும் கூறிய திவ்யா, யாராவது என் கார்த்தியை பார்த்தால் கண்டுபிடித்து தருமாறு கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் இந்த வீடியோவை பார்க்காத ஆளே இல்லை எனும் அளவிற்கு வீடியோ ட்ரெண்ட் ஆனது. காரணம், வீடியோ வெளியிட்ட பெண்ணின் தோற்றம், வீடியோில் குறிப்பிட்ட கார்த்திக் என்ற பெயர்.