‘கடன் மட்டும் வாங்கிறாதீங்க.. ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்.. அது உங்கள மட்டுமல்ல..’ -ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘கடன் மட்டும் வாங்கிறாதீங்க.. ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்.. அது உங்கள மட்டுமல்ல..’ -ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!

‘கடன் மட்டும் வாங்கிறாதீங்க.. ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்.. அது உங்கள மட்டுமல்ல..’ -ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 14, 2025 12:48 PM IST

எந்த ஒரு படைப்பாளியாக இருந்தாலும், அவர் முதலில் தன்னுடைய ஆன்மாவிற்காக தான் வேலை பார்ப்பார். அதன் பின்னர் தான் பணமெல்லாம். ஆகையால், இந்த விஷயத்தில், வாய்க்கு நாம் சாப்பிடுகிறோமா அல்லது நம்முடைய ஆன்மாவின் பசிக்கு நாம் சாப்பிடுகிறோமா என்பது வாய்ப்புகளாக இருக்கின்றன. - ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!

‘கடன் மட்டும் வாங்கிறாதீங்க.. ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்.. அது உங்கள மட்டுமல்ல..’ -ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!
‘கடன் மட்டும் வாங்கிறாதீங்க.. ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்.. அது உங்கள மட்டுமல்ல..’ -ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!

மிகப்பெரிய செல்வம் எது? 

அதில் அவர் பேசும் போது, ‘கீபோர்டு ப்ளேயராக இருக்கும் பொழுதே இரவு நெடுநேரம் நான் வேலை பார்ப்பேன். மியூசிக் டைரக்டர் ஆன பின்னர் அந்த நேரம், காலை வரை நீடிக்கிறது. அதேசமயம் நான் நன்றாகவும் தூங்குகிறேன். என்னைப் பொருத்தவரை அலாரம் வைக்காமல் உங்களால் நிம்மதியாக தூங்கி, நினைத்த நேரத்தில் எழுந்திருக்க முடியாது என்றால் அதுதான் மிகப்பெரிய செல்வம்.

எந்த ஒரு படைப்பாளியாக இருந்தாலும், அவர் முதலில் தன்னுடைய ஆன்மாவிற்காக தான் வேலை பார்ப்பார். அதன் பின்னர் தான் பணமெல்லாம். ஆகையால், இந்த விஷயத்தில், வாய்க்கு நாம் சாப்பிடுகிறோமா அல்லது நம்முடைய ஆன்மாவின் பசிக்கு நாம் சாப்பிடுகிறோமா என்பது வாய்ப்புகளாக இருக்கின்றன. 

ஒரு சிலருக்கு இது மாறுபடலாம்; அது தவறு இல்லை. உங்களுக்கு வயிறு நிரம்பிய பின்னர், எதற்கு வாய்க்கு சாப்பாடு போட வேண்டும். ருசிக்குதான் சாப்பிட வேண்டும் இல்லையா? என்னுடைய இப்போதைய தளம் அப்படித்தான் இருக்கிறது. 

ருசிக்காகதான் இசையமைக்கிறேன் 

நான் என்னுடைய ருசிக்காக தான் தற்போது இசை பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு படத்தின் ஒரு பாடலுக்கு டியூன் போட்டுக்கொண்டிருக்கிறேன் என்றால், அந்த டியூன் எனக்கு திருப்தி தராத போது, நான் இன்னொரு டியூனை கொடுக்க முயற்சிப்பேன். ஆனால், அந்த நேரத்தில் இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருந்தால், இன்னொரு ட்யூனை அந்த படத்திற்கு செய்வதற்கு நேரமில்லை என்று சொல்லும் நிலை உருவாகும். அது என்னுடைய வேலைக்கு உண்மையாக இல்லையோ என்ற பயத்தை கொடுக்கும். 

அதனால்தான் ஒரு படத்திற்கு நான் கமிட்டாகுவதற்கு முன்னால் நிறைய யோசிப்பேன்; ஒருமுறை  கமிட் ஆகிவிட்டால் யோசிக்க மாட்டேன்; அந்த படத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வேன். ஒரு நல்ல படைப்பாளியின் வேலையை அவனுடைய பண நெருக்கடி நிச்சயமாக இடையூறு செய்யும். ஆகையால் அந்த இடத்தை நாம் மிக மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும், நான் இந்த வருடம் குடிக்க மாட்டேன்; புகை பிடிக்க மாட்டேன் என்றெல்லாம் சபதம் ஏற்கிறோம். 

ஆனால், உண்மையில் ஒவ்வொரு வருடமும் நான் கடன் எதையும் வாங்க மாட்டேன். இருக்கும் கடன் தொகை அனைத்தையும் இந்த வருடம் அடைத்து விடுவேன் என்றுதான் சபதம் ஏற்க வேண்டும். என்னைப் பொருத்தவரை எல்லாவற்றையும் விட கெட்ட பழக்கம் கடன் வாங்குவதுதான். காரணம், புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்டவை உங்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், கடன் வாங்குவது உங்களை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும்.'  என்று பேசினார்.