கெட்டிமேளம் சீரியல் மே 8 எபிசோட்: கவினால் கண்கலங்கிய அஞ்சலி.. காதலை சொல்ல தயங்கும் வெற்றி.. கெட்டிமேளம் சீரியல்
கெட்டிமேளம் சீரியல் மே 8 எபிசோட்: துளிசியிடம் காதலை சொல்ல வெற்றி துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், துளசி வெற்றியை பற்றி பெருமையாக பேசியதால் காதலை சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

கெட்டிமேளம் சீரியல் மே 8 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசிக்காக ரௌடிகளிடம் சண்டை போட்டு கடத்தப்பட்ட சிலையை மீட்டுக் கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துளசிக்கு சப்போர்ட் செய்த வெற்றி
அதாவது, வெற்றி சிலையுடன் வந்ததும் அவனது அம்மா உனக்கு இதெல்லாம் தேவையா என்று கோபப்படுகிறாள். வெற்றி சிலை கிடைக்கலாம்னு துளசி எல்லாரும் தப்பா பேசுவாங்க என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
தயக்கத்தில் வெற்றி
இதைத்தொடர்ந்து வெற்றி துளசியுடன் காதலை சொல்லி விடலாம் என்று வர அப்போது துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை அவளுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் இதைப் பார்த்த வெற்றி கடுப்பாகிறான். மேலும் துளசி மாப்பிள்ளையிடம் வெற்றி பற்றி பெருமையாக சொல்கிறாள். இதனால் வெற்றி இப்படி பெருமையா பேசுற உன்கிட்ட தன்னுடைய காதலை இப்படி சொல்றது என தெரியாமல் தவிக்கிறான்.
பல்லக்கு தூக்கும் வெற்றி
அடுத்து கோவிலில் ஒரு சிறிய பூஜை நடக்க அதில் எல்லோரும் கலந்து கொள்கின்றனர். பிறகு பல்லக்கு சிவராமன் குடும்பத்தில் துளசியின் மாப்பிள்ளையும் பல்லக்கை தூக்க வெற்றியின் நண்பன் மாப்பிள்ளையின் காலை மிதித்து அதன் பல்லக்கு தூக்க முடியாதபடி செய்கிறான். அடுத்து வெற்றி அவனுக்கு பதிலாக பல்லுக்கு தூக்குகிறான்.
அதேபோல் வரதராஜன் கவினை பல்லக்கு தூக்க சொல்லி கூப்பிட அவன் முகத்தை மறைத்தபடி பல்லக்கு தூக்குகிறான். அஞ்சலி கவினை பார்த்து அவரை பின்தொடர கவின் அவள் கண்ணில் படாமல் போடுகிறான்.
கவினால் கண்கலங்கும் அஞ்சலி
இங்கே கோவிலில் அஞ்சலி கவினை துரத்த அவன் நேராக மகேஷிடம் சென்று நான் உங்களை எங்க காலேஜ்ல பார்த்து இருக்கேன் என்று சொல்கிறான். மகேஷ் அப்படியா எந்த காலேஜ் என்று கேட்க காலேஜ் பெயரை சொன்னதும் என் மனைவி அஞ்சலியும் அந்த காலேஜ்ல தான் படிச்சா.. அவளை தெரியுமா என்று அஞ்சலியை அறிமுகம் செய்ய கவின் தெரியாது என ஷாக் கொடுக்கிறான்.
இதனால் வீட்டுக்கு வந்த அஞ்சலி ரூமுக்குள் சென்று கவின் ஏன் இப்படி சொன்னான் என்று கண்ணீர் விட்டு அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்