கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்

கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 12:30 PM IST

திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், துளசியும் அஞ்சலியும் எடுத்து வந்த சிலையை திருட புது வில்லன் கும்பல் களம் இறங்கியுள்ளது.

கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்
கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்

திருவிழாவுக்கு நடக்கும் ஏற்பாடு

ஈஸ்வரமூர்த்தி மற்றும் முனுசாமி ஆகியோர் வெற்றியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த திருவிழாவிற்கு தேவையான பூ ஆர்டர்களை ரேவதியிடம் கொடுக்க முருகன் அவளுக்கு துணையாக இருந்து ஆர்டரை முடித்து விடலாம் எனச் சொல்கிறான்.

துளசியின் சந்தோஷமும் வெற்றியின் முடிவும்

ஆபீசுக்கு வந்த துளசி தனக்கு நிச்சயம் நடந்து முடிந்து விட்டதாக சொல்லி எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறாள். வெற்றி அங்கு வர துளசியைப் பார்த்து என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல என்று கேட்கிறான். எனக்கு நிச்சயம் நடந்தது பார்த்து என் அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அவங்களோட சந்தோஷம் தான் என்னுடைய சந்தோஷம் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட வெற்றி துளசியை காதலிக்கும் விஷயத்தைப் பற்றி ஏன் லட்சுமி அக்காகிட்ட சொல்லக்கூடாது என முடிவெடுக்கிறான்.

திருமண அறிவிப்பு

அதாவது, சிவராமன் குடும்பம் திருவிழா நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். பிறகு உங்க சம்பந்தி வரலையா என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி மற்றும் முனுசாமி குடும்பத்தினர் ஒன்றாக வருகின்றனர். அதன் பிறகு நாங்க அரசியலில் எதிரியாக இருக்கலாம் ஆனால் தற்போது அமைதியாக போகிறோம் என்று அறிவிக்கின்றனர்.

அதாவது என்னுடைய மகன் வெற்றிக்கும் முனுசாமியின் மகள் திவ்யாவுக்கும் கல்யாணம் நடக்க போவதாக மக்களுக்கு அறிவிப்பை கொடுக்கின்றனர். அடுத்ததாக தர்மகர்த்தா வரதராஜன் குடும்பத்தினர் வருகின்றனர்.

கண்டுகொள்ளாத வரதராஜன்

இவர்களுடன் கவின் வர அஞ்சலியை பார்த்த அவன் அஞ்சலி கண்ணில் படாமல் போன் வந்தது போல போனை எடுத்து கொண்டு நகர்ந்து சென்று விடுகிறான். அதன் பிறகு ஈஸ்வரமூர்த்தி முனுசாமி ஆகியோர் தர்மகத்தாவை வரவேற்று தங்களது குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

ஈஸ்வரமூர்த்தி சிவராமன் குடும்பத்தை அறிமுகம் செய்ய வரதராஜன் அதை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விடுகிறார். இதனால் லட்சுமி வருத்தமடைய சிவராமன் ஆறுதல் கூறுகிறார். துளசி மற்றும் அஞ்சலி என இருவரும் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல வெற்றி ஃபீல் செய்கிறான்.

சிலை கடத்தல் பிளான்

அடுத்ததாக ஈஸ்வரமூர்த்தி, முனுசாமி என இருவருக்கும் பொதுவான எதிரி ஒருவன் என்ட்ரி கொடுக்கிறான். இந்த திருவிழா நல்லபடியாக நடக்கக்கூடாது என திட்டம் போட்டு சிலையை கடத்த பிளான் போடுகிறான்.

பிறகு எல்லோரும் சிலையை ஆற்றுக்கு கொண்டு போய் பூஜை செய்து திரும்ப கொண்டு வருவதற்காக கிளம்ப வில்லன் செய்த ஏற்பாட்டால் துளசி, அஞ்சலி கொண்டு சென்ற சிலையை கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.