கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..

Malavica Natarajan HT Tamil
Published Jun 12, 2025 11:47 AM IST

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், வெற்றி வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிந்த நிலையில், லட்சுமி அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..

வெற்றிக்கு அட்வைஸ்

அதாவது ஈஸ்வரமூர்த்தி லட்சுமியிடம் வெற்றி உங்ககிட்ட தான் எல்லா விஷயத்தையும் சொல்றான். அவன் யாரை காதலிக்கிறான் அப்படின்னு கேட்டு சொல்லுங்க என்று உதவி கேட்கிறார். இதையடுத்து, லட்சுமி வெற்றியை சந்தித்து உனக்கு கல்யாணம் முடிவு பண்ணி பத்திரிக்கை எல்லாம் அடிச்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்படி இருக்கும்போது வேறொரு பொண்ணை காதலிக்கிறது தப்பு என்று சொல்கிறாள்.

விஷம் குடிக்க தயாரான ரகு

ஆனால் வெற்றி யார் என்ன சொன்னாலும் என்னால என்னுடைய மனச மாத்திக்க முடியாது என்று சொல்லி விடுகிறான். அதன் பிறகு லட்சுமி சிவராமன் ஆகியோர் வீட்டுக்கு வர ரகுவரன் எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி சந்தித்து விட்டு வருவதாக சொல்ல இந்த விஷயத்தை ஊருக்கே தெரியப்படுத்துங்க. என்னால அவமானத்தோட வாழ முடியாது நான் இப்பவே செத்துப் போறேன் என்று விஷம் குடிக்க போகிறான்.

துளசிக்கு ஆதரவாக நிற்கும் சிவராமன்

துளசி என் கழுத்துல தாலியை கட்டினது யாருனு எனக்கு தெரியாது. ஆனா அவனை கண்டுபிடித்து தண்டிக்காமல் விடமாட்டேன் என்று சொல்ல சிவராமன் நான் என் பொண்ணுக்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல்கிறார்.

மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி

அடுத்து அஞ்சலி வீட்டில் வாட்ச்மேனை சந்திக்க அவரிடம் நான் ரெண்டு மாசமா இங்க தன் இருக்கேன் ஒரு நாள் கூட உங்கள பார்த்ததில்லையே என்று கேட்க அவர் நான் ரெண்டு வருஷமா இங்கதான் இருக்கேன் உங்கள பார்த்ததில்லை என்று சொல்கிறான். பிறகு அஞ்சலி மகேஷ் எப்படி என்று விசாரிக்க வாட்ச்மேன் ரொம்ப நல்லவர் என்று சொல்கிறார்.

மேலும் வேலைக்காரங்க வேலை செய்வதா மகேஷ் சொல்லுவாரு ஆனால் யாரையும் நான் பார்த்ததில்லை என்று சொல்ல வாட்ச்மேன் அப்படி யாரும் இங்கு வராது கிடையாது எல்லா வேலையும் மகேஷ் சார் தான் பார்ப்பாரு என்று உண்மையை உடைக்கிறான்.

துளசியின் திட்டம்

அதன் பிறகு கோவில் திருவிழாவில் நகையை திருடியவனை கண்டுபிடிக்க ஒரு பத்திரிக்கையை அடிக்கின்றனர். கோவில் வாசலில் முருகன் எல்லோருக்கும் கொடுக்க அங்கு வந்த ரேவதி என்ன இது என்று கேட்க முருகன் துளசிக்கு நடந்த விஷயங்களை சொல்கிறான். ரேவதிக்கு அம்மா ஒருத்தனை திருடன் என்று கைப்பிடித்து சத்தம் போட்ட விஷயத்தை சொல்ல முருகன் இது துளசிக்கு தெரியுமா என்று கேட்கிறான்.

பிறகு துளசியும் ஒரு பக்கம் இதே பத்திரிகையை கொடுக்க நண்பன் மூலமாக இந்த பத்திரிக்கை விஷயம் வெற்றிக்கு தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.