Yaar Paiyyan: தந்தையை தேடி சிறுவன் மேற்கொள்ளும் பயணம்!கிளைமாக்ஸில் டுவிஸ்ட் - சிறந்த பிளாக் அண்ட் ஒயிட் காமெடி படம்
தந்தையை தேடி சிறுவன் மேற்கொள்ளும் காமெடி பயணமாகவும் தமிழில் சிறந்த பிளாக் அண்ட் ஒயிட் காமெடி படமாக இருந்து வருகிறது யார் பையன் திரைப்படம். படத்தின் கிளைமாக்ஸில் வரும் டுவிட்ஸ்டும், கருத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

தமிழில் வெளியான பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் சிறந்த காமெடி படமாகவும், குழந்தைகளுக்கான படமாகவும் அனைத்து வயதினரையும் கவர்ந்த படம் யார் பையன். டி.ஆர். ரகுநாத் இயக்கி இந்த படத்துக்கு ஸ்ரீதர் திரைக்கதை எழுதியிருப்பார். படத்தின் முதல் ப்ரேம் முதல் கடைசி பிரேம் வரை விடாது சிரிப்பை வரவழைக்கும் விதமாக அமைந்திருந்தது இந்த படம்.
படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் அப்போதைய நட்சத்திர ஜோடிகளான ஜெமினி கணேசன் - சாவித்ரி, ரியல் லைஃப் ஜோடிகளான என்எஸ்கே - மதுரம், டி.ஆர். ராமச்சந்திரன், வி.கே. ராமசாமி நடித்திருப்பார்கள். ஆனால் படத்தின் கதையை பூரி என்கிற சிறுவனை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கும். அதன்படி கதையின் குட்டி நாயகனாக வலம் வந்த பூரியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை டெய்சி இரானி நடித்திருப்பார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து ஃபர்கான் அக்தர், பிரபல நடன இயக்குநர் ஃபராகானின் பெரியம்மா தான் இந்த டெய்சி. 1960 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் தோன்று தனது குறும்புத்தனமான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார்.
சிறுவனால் ஏற்படும் குழப்பம்
ஜெமினி கணேசனை தந்தை என சொன்ன தனது தாத்தாவின் சொல் பேச்சை கேட்டு அவரிடம் ஒட்டிக்கொள்ளும் சிறுவன் பூரியால் ஏற்படும் குழப்பமே படத்தின் ஒன்லைன். வங்காளத்தில் சூப்பர் ஹிட்டான செலி கார் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவானது.
பாடத்தில் சாவத்திரி, என்எஸ்கே, மதுரம், டி.ஆர். ராமசந்திரன் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ப தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கிளாப்ஸ் வாங்கியிருப்பார்கள். சிறுவன் வேடத்தில் நடித்த டெய்சி இரானியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.
யார் பையன் இந்த சிறுவன் என குழப்பம் உச்சத்தை தொடும்போதும் அவனது தாத்தாவே டுவிஸ்ட்டை உடைத்து, அதற்கு காரணமாக இருக்கும் பருவக்கோளாறு பின்னணியை வெளிப்படுத்துவார். பின்னர் அனைவரும் ஒன்று படத்தை சுபம் என முடித்திருப்பார்கள்.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
மருதகாசி பாடல்வரிகளுக்கு எஸ். தக்ஷினாமூர்த்தி இசையமைத்திருந்தார். பி. சுசிலா பாடிய தந்தை யாரோ தாய் யாரோ பாடலுக்கு மட்டும் டி. சலபதிராவ் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் சூப்பர்ஹிட்டாகின.
முழுக்க காமெடி கலந்த டிராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம், விறுவிறுப்பான திரைக்கதை, குறும்புத்தனமான காமெடி வசனங்கள் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன் படம் வெளியான ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
எந்த வித விரசமும் இல்லாமல், திரைக்கதையுடன் ஒன்றாக பின்னி பிணைந்தவாறு இருக்கும் காமெடியுடன் வெளிவந்த யார் பையன் சிறந்த பொழுதுபோக்கு படமாகவே இருந்தது. ரியல் ஜோடிகளான மாறிய ஜெமினி - சாவித்திரி, என்எஸ்கே - மதுரம் இணைந்து நடித்து ஹிட் படமாகவும், சிறந்த நகைச்சுவை படமாகவும் அமைந்த யார் பையன் வெளியாகி இன்றுடன் 67ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்