Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை; ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pa.ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை; ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!

Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை; ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 31, 2025 04:48 PM IST

Pa.Ranjith Vaanam Festival: கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு, கலை மற்றும் இலக்கிய விழாவை பா.இரஞ்சித் மற்றும் நீலம் குழுவினர் முன்னெடுத்து நடத்திவருகின்றனர்

Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை.. ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!
Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை.. ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!

நீலம் பண்பாட்டு மையம்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றது. இதனை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு விஷயங்கள் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து வரும் ஏப்ரல் மாதம் எடுக்கப்படும் விழாக்கள் குறித்து பார்க்கலாம்.

கலை மக்களுக்கானது,

இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், ‘கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு, கலை மற்றும் இலக்கிய விழாவை பா.இரஞ்சித் மற்றும் நீலம் குழுவினர் முன்னெடுத்து நடத்திவருகின்றனர்

ஏப்ரல் 1 ம் தேதி துவக்கவிழா

இந்த வருடம் ஏப்ரல் 1 ம் தேதி துவக்கவிழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் துவங்குகிறது. பி கே ரோசி திரைப்படவிழா ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதிவரைநடைபெறுகிறது; இதில் உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி நிரல்

திரையிடல் நடைபெறும் இடம் - பிரசாத் லேப் தியேட்டர் சாலிகிராமம்.சென்னை.

ஏப்ரல் - 3 முதல் 6 வரை பி கே ரோசி ஆவணப்படம் மற்றும் குறும்படங்கள் திரையிடலும் நடைபெறவிருக்கின்றன.

நடைபெறும் இடம் - மேக்ஸ் முல்லர் பவன், நுங்கம்பாக்கம். சென்னை.

ஏப்ரல் 12 , 13 வேர்ச்சொல் தலித் இலக்கியக்கூடுகை நடைபெற இருக்கிறது.

நடைபெறும் இடம் முத்தமிழ் பேரவை. சென்னை!

ஏப்ரல் 18 தம்மா நாடகத்திருவிழா

இடம்- எழும்பூர் அருங்காட்சியகம். சென்னை,

ஏப்ரல் - 23 முதல் 29 வரை புகைப்படக்கண்காட்சியும், ஓவியக்கண்காட்சியும் நடைபெறுகிறது.

இடம் - லலித் கலா அகாடமி இரண்டாம் தளம் சென்னை

சினிமாவை கருவியாக பயன்படுத்திய கலைஞன்

மதத்தாலும், கடவுளின் பெயராலும், சாதி அடிப்படையாலும் காலம் காலமாக தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சுமந்து வருபவர்களை, மேல் தட்டு மக்கள் எப்படி எல்லாம் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையை எப்படி எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்பதை சினிமாவில் பேசி வருகிறார் பா.ரஞ்சித்..

அப்படி அவர் எடுத்த அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், திரையுலகத்தை கவனிக்க வைத்தது. சினிமா மட்டுமல்லாது, புத்தக வாசிப்பு, தலித் சினிமாக்கள் திரையிடல் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை பா.ரஞ்சித் எடுத்து வருகிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது வேட்டுவம் என்ற படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இருந்து வருகிறார்.