Airaa: சாதுவான திகில் கிளப்பிய ஐரா வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு
நயன்தாரா நடித்த ஐரா படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நயன்தாரா தனது கேரியரில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், ஐரா. கேரக்டர்கள் வழக்கமானதாக இருந்தாலும் இரண்டாவதாக அவர் ஒரு டி கிளாமரஸ் பாத்திரத்தில் தனித்து நிற்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
யமுனா (நயன்தாரா) என்ற பத்திரிகையாளரை மையமாக கொண்ட கதை, வாசகர்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வீட்டில் அவளுடைய பெற்றோர் அவளை திருமணம் செய்யப் பின்தொடர்கிறார்கள். ஆனால் அவர் அதற்கு இன்னும் தயாராகவில்லை. அவளுடைய பெற்றோர்கள் ஒரு பையனை இறுதி செய்யும்போது, அவள் வீட்டை விட்டு பொள்ளாச்சி சென்று தனது பாட்டியின் வீட்டிற்கு செல்கிறாள். விரைவில், யமுனா வினோதமான நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார் - கதவுகள் சத்தமிடுவது, நாற்காலிகள் ஆடுவது வரை. அவருக்குள் ஆவி சென்றுவிடுகிறது. எதனால் அப்படியானது என்பதை தேடி கண்டுபிடிப்பதே கதையாகும்.
இயக்குநர் சர்ஜுன் இயக்கிய இப்படத்தை பார்க்கும்போது மொத்தமாக யூகிக்ககூடியதாக இருந்தன. முதல் பாதியில் தொடங்கி இடைவேளைக்கு செல்லும் போது தான் படத்தின் சில பரபரப்பான காட்சிகள் நடக்கும். மர்ம மரணங்கள் மேலும் ஆர்வத்தை கூட்டியது.
மிக முக்கியமான இரண்டாம் பாதியானது ஆரம்பத்திலேயே தடுமாற்றாலுடன் நகரும். முழு சஸ்பென்ஸ் சீனும் போய்விட்டது, மேலும் ஒரு வித்தியாசமான திரைப்படத்தைப் பார்ப்பது போல் இருக்கும் என நம்பினோம். ஆனால் இறுதியாக அது ஒரு நாடகமாக போய் முடியும் அளவில் இருந்தன. இன்னும் க்ளைமாக்ஸுக்கு முந்தைய பிரிவில், சில குளருபடிகள் இருந்தன. அந்த பகுதிக்கான திரைக்கதையும், நடிப்பும் கவனத்தை ஈர்க்கின்றன.
பாட்டி, குட்டி பையன் பப்ளூ, அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் அவரவர் பணியை சரியாக செய்தனர். யமுனாவை பவானி கொல்லத் துடிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க என்ற எண்ணம் தோன்றியது.
கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ஐரா இன்னும் நன்றாக சென்று இருக்கும்.
டாபிக்ஸ்