Actor Dhanush: 'யார் அந்த மேலிடம்?' தனுஷ் விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி சொன்னதை அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Dhanush: 'யார் அந்த மேலிடம்?' தனுஷ் விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி சொன்னதை அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..

Actor Dhanush: 'யார் அந்த மேலிடம்?' தனுஷ் விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி சொன்னதை அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 31, 2025 01:17 PM IST

Actor Dhanush: நடிகர் தனுஷிற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த பிரச்சனை தொடர்பாக ஆர்.கே. செல்வமணியிடம் அடுக்கடுக்கான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம்.

Actor Dhanush: 'யார் அந்த மேலிடம்?' தனுஷ் விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி சொன்னதை அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..
Actor Dhanush: 'யார் அந்த மேலிடம்?' தனுஷ் விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி சொன்னதை அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..

தனுஷ் தங்கள் படத்தில் நடப்பதாகக் கூறி முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர், கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டு மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளார். அதில் ஆர்.கே. செல்வமணியிடம் பல கேள்விகளை கேட்டுள்ளார்.

ஆர். கே. செல்வமணிக்கு கடிதம்

அந்த அறிக்கையில், "திரு. ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு, 06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.

மேலிடத்து உத்தரவு

அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, டான் பிக்சர்ஸ் திரு.ஆகாஷ் அவர்களின் "இட்லிகடை படப்பிடிப்பு நடக்கவேண்டும், மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ?

நியாயம் வழங்க தான் சங்கம்

மேலும் அக்டோபர் 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்... நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை. ஏற்கனவே திரு.தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன்...நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன???

அரசியல் குறுக்கீடு

தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை... வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள்.. தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில், அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்…

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் அறிக்கை
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் அறிக்கை

மனசாட்சியற்ற பேச்சு

அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம். அக்டோபர் 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று திரு.கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது....

நியாயம் பெற்றுத்தர வேண்டுகிறோம்

மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே... நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை...தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்த பிரச்சனை

முன்னதாக, தயாரிப்பாளர்கள் சிலரிடம் படம் நடிப்பதாகக் கூறி அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் இருந்தாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு ரெட்கார்டு விதிக்கப்பட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட்டும்ஒரு தயாரிப்பாளருக்கு அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி கொடுப்பதாகவும் தனுஷ் கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.