அடுத்தடுத்து அதிர்ச்சி - மர்ம தேசத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு - அவரது முழுப்பின்னணி
அடுத்தடுத்து அதிர்ச்சி - மர்ம தேசத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு ஆகியுள்ளார்.

பிரபல எழுத்தாளரும் ஆன்மிகச்சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தர்ராஜன் காலமானார். அவருக்கு வயது 66.
இந்திரா செளந்தர்ராஜன் மதுரையில் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். குறிப்பாக, மர்மம், பேய், அமானுஷ்யம் சார்ந்த கதைகளை எழுதுவதில் வல்லவர். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தபோது உயிரிழந்தார். இன்று காலை பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழந்த நிலையில் நண்பகலில் இந்திரா செளந்தர்ராஜன் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இந்திரா செளந்தர்ராஜன்?:
இந்திரா செளந்தர்ராஜன் 1958ஆம் ஆண்டு சேலம் நகரில் நவம்பர் 13ஆம் தேதி பிறந்தவர். முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன், டி.வி.எஸ் குழுமத்தில் பணிசெய்தார், இந்திரா சவுந்தர்ராஜன். இவரது இயற்பெயர் பி.சவுந்தர்ராஜன். எழுதியது தான் இந்திரா சவுந்தர்ராஜன் என்னும் பெயரில் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முக்கியமான கதைகள் பலவும் மறுபிறவி, இயற்கைக்கு அப்பாற்பட்ட கதைகள், தெய்வீக சஞ்சலத்தால் உண்டாகும் ஃபேண்டஸி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.