எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 03:18 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: மணிவிழா ஏற்பாடு நடக்கும் சமயத்தில் போலீஸை வரவைத்து ஜனனி ஆதி குணசேகரனை ஆட்டம் காண வைத்தாள்.

எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்:  ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்

தும்மிய ஜான்சி ராணி

அவளை, வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் சமாதானம் சொல்லி விழாவிற்கு தயாராகச் சொல்கின்றனர். அதற்குள் வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் எல்லாம் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், ஜான்சி ராணி நடுவீட்டில் அமர்ந்துகொண்டு தும்புகிறாள், இதைப் பார்த்த விசாலாட்சி, ஜான்சி ராணியை திட்டுகிறாள். விழா நடக்கும் இடத்தில் இப்படி அபசகுணமாக தும்முவது சரியா எனக் கேட்கிறாள்.

வீட்டிற்குள் வந்த போலீஸ்

ஆனால், அதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாத ஜான்சி ராணி, ஆதி குணசேகரனிடம் தன் தும்மல் உனக்கு நல்லதைத் தான் தரும் என சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே போலீஸ் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். என்ன ஏது என புரியாமல் நந்தினி போலிசாருடன் வீட்டிற்குள் வருகிறாள், நல்ல காரியம் நடக்கும் சமயத்தில் போலீஸ் வீட்டிற்கு வருவதைப் பார்த்த கதிரும் ஞானமும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.

கத்தும் கதிர்

எதற்காக வந்திருக்கிறீர்கள். சொந்தம் எல்லாம் வீட்டில் கூடி இருக்கும் போது, இப்படி வருவது சரியா, எதுவாக இருந்தாலும் வெளிய வந்து பேசுங்க என கதிர் துள்ளிக் கொண்டிருந்தான். அத்தோடு அவனுடன் ஞானமும் சேர்ந்து போலீஸை மரியாதை இல்லாமல் நடத்தினர். இதை துளியும் எதிர்பார்க்காத ஆதி குணசேகரன் தம்பிகளை மேம்போக்காக தடுக்கிறான்.

கடுப்பான போலீஸ்

பின், விசாரித்ததில் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதி குணசேகரனால் பிரச்சனை என்றும், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை அறிய வந்திருப்பதாகவும் கூற, அவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்கள் என கதிர் தெனாவட்டாக பேசினான். பின், போலீசை வெளியே அனுப்பவதிலேயே குறியாக இருந்ததால் ஆத்திரமடைந்த போலீஸ், எனக்கும் என் வேலைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. என கோபமாக பேசினார்.

வேடிக்கை பார்த்த ஜனனி

இந்த சமயத்தில் இங்கு நடக்கும் இத்தனை கலவரத்திற்கும் ஜனனி தான் காரணம் எனக் கூறி விசாலாட்சி ஜனனியை திட்டினாள். அப்போது, ஆதி குணசேகரனும் சக்தியும் ஜனனியை கோபத்தோடு பார்த்தனர். ஜனனி அவர்களை கண்டுகொள்ளாமல் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அலை பாய்ந்த மனசு

பின், ஜனனியிடம் இந்த வீட்டில் உங்களுக்கு ஏதாவது இவரால் பிரச்சனை இருக்கிறதா என போலீசார் கேட்டார். அப்போது, ஜனனிக்கு தன் காலில் பூந்தொட்டி போட்டு காலை உடைத்தது, குளிக்கும் போது ஹீட்டரை வெடிக்க வைத்து கொலை செய்ய முயற்சித்தது, தன் வாக்கிங் ஸ்டிக்கை உதைத்து கீழே விழ வைத்து ரசித்தது போன்ற ஆதி குணசேகரனின் செயல்களை யோசித்து பார்த்தாள்.

பதற்றத்தில் ஆதி குண சேகரன்

அப்போது மீண்டும் போலீஸ் அவளிடம் கேட்கும் போது, அவள் என்ன சொல்வாள் என்ற பயத்தில் ஆதி குணசேகரன் ஜனனியையே பார்த்துக் கொண்டிருந்தான். ஜனனி சொல்லப் போகும் வார்த்தையில் தான் ஆதி குணசேகரனின் மணி விழா நடக்க இருப்பதால் வீட்டில் உள்ள அனைவருமே ஜனனியின் வார்த்தைக்காக காத்திருக்கின்றனர்.