எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: ஆதி குணசேகரனை அரண்டு போக வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: மணிவிழா ஏற்பாடு நடக்கும் சமயத்தில் போலீஸை வரவைத்து ஜனனி ஆதி குணசேகரனை ஆட்டம் காண வைத்தாள்.

எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் மணிவிழா நடப்பதற்கான ஏற்பாட்டை ரேணுகா, நந்தினி, ஜனனி என எல்லோரும் காலை 3 மணி்கே எழுந்து தயாராகி செய்து வருகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மணிவிழாவிற்கு தயாராகிவிட்ட நிலையிலும் ஈஸ்வரி தயாராகாமல் எதையோ பறிகொடுத்தவள் போல அமர்ந்திருக்கிறாள்.
தும்மிய ஜான்சி ராணி
அவளை, வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் சமாதானம் சொல்லி விழாவிற்கு தயாராகச் சொல்கின்றனர். அதற்குள் வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் எல்லாம் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், ஜான்சி ராணி நடுவீட்டில் அமர்ந்துகொண்டு தும்புகிறாள், இதைப் பார்த்த விசாலாட்சி, ஜான்சி ராணியை திட்டுகிறாள். விழா நடக்கும் இடத்தில் இப்படி அபசகுணமாக தும்முவது சரியா எனக் கேட்கிறாள்.