எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?

எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 05, 2025 02:34 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: ஈஸ்வரி கஷ்டப்படும் படி தர்ஷினி பேச எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர். ஜனனி தர்ஷினியை கண்டித்தாள்.

எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?
எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?

உள்ளூர நடுங்கிய குணசேகரன்

மற்றொரு பக்கம் குணசேகரன் சக்தியிடம் இந்த மணிவிழா நல்லபடியாக நடக்குமா என்று கேட்க, சக்தியோ இவ்வளவு தூரம் வந்தாச்சு.. பிறகு என்ன அண்ணா என்று ஆசுவாசப்படுத்தினான். அதற்கு குணசேகரன் உன்னுடைய மனைவியை நினைத்தால் தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினார்.

இதற்கிடையே, ஈஸ்வரி கஷ்டப்படும் படி தர்ஷினி பேச எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர். ஜனனி தர்ஷினியை கண்டித்தாள். இது தொடர்பான நிகழ்வுகள் சீரியலில் இடம் பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் சக்தியிடம் மணிவிழாவை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குணசேகரின் சக தம்பிகளும் அங்கு வந்துவிட, அவர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவர்களும் மணிவிழாவை ஜாம் ஜாம்வென்று நடத்தி விடலாம் என்று கூறினர். இந்த நிலையில் அவர்களின் மனைவிகளும் எழுந்து அங்கே வர, காபி போட்டு எடுத்து வாருங்கள் என்று குணசேகரன் கூறினர்.

முட்டி மோதும் ஜனனி தரப்பு

இதைக்கேட்டு எல்லோரும் கடுப்பாகின்றனர். நடு இரவில் காபி கேட்கிறார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே , அங்கு வந்த குணசேகரன் அண்ணனின் அம்மா நாளை வரும் விருந்தினர்களுக்கு நீங்கள்தான் சமைக்க வேண்டும் என்று பெரிய குண்டாக தூக்கி போட்டார். இதைக் கேட்ட நந்தினி, டென்ஷனாகி நாங்கள் ஏன் சமைக்க வேண்டும் என்று கேட்க, நீங்கள் தான் சமைக்க வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தினர்.

உடனே நந்தினி தரப்பு நாங்கள் சமைப்பது பற்றி எங்களுக்கு எந்தவித கவலையும் கிடையாது. ஆனால் எங்களுக்கு இங்கு அதற்கு உரிய மரியாதை கிடைக்காது. அதனால் நாங்கள் இதை செய்ய மாட்டோம் என்று கூறினர்.

ஆனாலும் எல்லோரும் அவர்களை வற்புறுத்த வேறு வழியில்லாமல் அவர்கள் சமைக்க வேண்டியதாயிற்று. இந்த உரையாடலில் குணசேகரின் அம்மா ஜனனிக்கு குழந்தை இல்லை என்பதையும் குத்தி காட்டி பேசினார். மறுநாள் அதிகாலையிலேயே வேலைகளை கவனிக்க நந்தினியும், ரேணுகாவும் அவர்களது கணவர்களை எழுப்ப, அவர்களோ எழுந்திருக்க மறுத்தனர். இதனையடுத்து அவர்கள் எழுந்து வர, அங்கு ஜனனியும் வந்து விட்டாள்.

இதற்கிடையே ஈஸ்வரியும் அங்கு வர, இவர்கள் சமையலுக்காக புறப்பட்டு வந்து நிற்பதை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது