எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 15, 2025 08:15 AM IST

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: ஆதி குணசேகரன் வீட்டு பெண்களை தனித்தனியாக பிரிக்கும் வேலையில் கதிரும் அறிவுக்கரசியும் இறங்கி உள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்

வீட்டிற்குள் ஆள் அனுப்பிய அறிவுக்கரசி

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த அறிவுக்கரசி, அவளுடைய பெரியம்மாவையம், இன்னொரு பெண்ணையும் வீட்டில் சமையலுக்காக கொண்டுவந்து விட்டுள்ளாள், இவர்களை வைத்து அறிவுக்கரசி பலே திட்டம் தீட்டிய நிலையில், வீட்டிற்கு வந்த பெண்களை வைத்து குழந்தைகளை வம்புக்கு இழுத்து கோவப்படுத்தினார்.

கதிர்- அறிவு திட்டம்

இது இப்படி இருக்க, வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் ஒன்றாக இருக்கும் வரை எப்படியும் நமக்கு பிரச்சனை தான் என்பதை உணர்ந்த அறிவுக்கரசி, கதிரோடு சேர்ந்து பெண்கள் அனைவரையும் பிரிக்க திட்டம் போடுகிறாள். இதை அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்து திட்டத்தை ஆரம்பிப்பதாக போனில் சொன்னார்.

என்ன செய்ய போகிறான் சக்தி

அந்த திட்டம் நிறைவேறியதை அடுத்து, சக்தி ஜனனிக்கு போன் செய்கிறான். எதற்காக போன் செய்தான் என்பதை சொல்லாமல், அவர்கள் இருக்கும் இடத்தின் லொக்கேஷனை கேட்கிறான். ஜனனியும் சக்தி மேல் இருக்கும் நம்பிக்கையால் லொக்கேஷனை அனுப்புகிறாள்.

சக்தி, தனக்காகவும் குடும்பத்திற்காகவும் பேசப் போகிறானா அல்லது தன் அண்ணனுக்காகவும் அவரின் திட்டத்திற்காகவும் பேசப் போகிறானா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாசாங்கு செய்யும் பெரியம்மா

இதற்கிடையில், அறிவுக்கரசியின் பெரியம்மா, வீட்டில் சமைத்து கொடுத்து விசாலாட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் எனத் துடிக்கிறாள். அத்தோடு அவளை பெருமையாக பேசி பாசாங்கு செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த கரிகாலன், அவளுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கி அசிங்கப்படுத்தினான்.

சுவையில்லாத சமையல்

ஜனனி தரப்பு வீட்டிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில், குழந்தைகள் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்தனர்; இந்த நிலையில் கரிகாலனும் ஞானமும் சமையல் செய்து குடும்பத்திற்கு கொடுத்தனர். ஆனால், அந்த சமையல் எந்த வித சுவையும் இல்லாமல் இருந்தது.

ஆன்லைனில் வந்த சாப்பாடு

இதை முன்பே கணித்த குழந்தைகள், அந்த சாப்பாடு தங்களுக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கூறினர். ஆனால், கதிர் அவர்களை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க முயற்சித்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டனர். இதற்கிடையே ஜனனி அவர்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் போட்ட நிலையில், அந்த சாப்பாடு வந்திருப்பதை நந்தினி அவளது மகளிடம் கூறினார்.

கோபத்தில் கதிர்

இதையடுத்து அவள் அந்த சாப்பாட்டை வாங்கும் போது, கதிர் அதை பார்த்து விட்டான். பார்த்த மாத்திரத்திலேயே அது ஜனனியின் வேலை என்பதை தெரிந்து கொண்ட அவன், அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்து, கடுமையாக நடந்து கொண்டான். தொடர்ந்து, அவர்கள் கரிகாலனின் சாப்பாட்டை சாப்பிடும் பொழுதுதான், சாப்பாடு மோசமாக இருந்தது எல்லோருக்கும் தெரிய வந்தது.